'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை'

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை'

1 mins read
df05a5c6-05f8-4667-bb1e-26f45f24620c
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். படம்: ஊடகம் -

சட்­ட­மன்­றத் தேர்­தல் அடுத்­தாண்டு மே மாதம் நடக்க உள்ள நிலை­யில், அதி­முக, பாஜக கூட்­டணி கட்­சி­க­ளுக்­குள் சூடு பறக்­கும் கருத்து மோதல்­களும் வாக்­கு­வா­தங்­களும் வெடித்து வரு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் கூட்­டணி ஆட்சி அமைக்­கப்­படும் என்று பாஜக மாநி­லத் தலை­வர் எல்.முரு­கன் கூறி­ய­தற்கு பதி­லடி தரும் வகை­யில் பேசி­யுள்ள தமி­ழக மீன்­வ­ளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார், "தமிழ கத்­தில் கூட்­டணி ஆட்சி என்ற பேச்­சுக்கே இட­மில்லை. வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­முக தனிப் பெரும்­பான்­மை­யு­டன் வெற்றி பெற்று மீண்­டும் ஆட்சி அமைக்க மக்­கள் வாக்­க­ளிப்­பார்­கள்," என்று தெரி­வித்­துள்­ளார்.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­மு­க­வு­டன் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டது பாஜக. இதே கூட்­டணி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தொடர வாய்ப்­புள்­ள­தாக கூறும் முரு­கன், "தமி­ழ­கத்­தில் கூட்­டணி ஆட்சி அமைக்­கப்­படும். பாஜக ஆத­ர­வின்றி எந்­தக் கட்­சி­யும் ஆட்சி யமைக்க முடி­யாது," என்­றும் கூறி­வ­ரு­கி­றார். அவ­ரது இந்த கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் கூட்­டணி என்­பது தேர்­த­லுக்­காக மட்­டும் இருந்­துள்­ளதே தவிர ஆட்சி அமைய வாய்ப்­பில்லை என்றே திமுக, அதி­மு­க­வி­னர் கூறி வரு­கின்­ற­னர்.