சென்னை: எப்போதும் மிடுக்கான உடையுடன் காணப்படும் இரு சகோதரர்கள் ஆடு திருடர்கள் என்பதும் அவர்கள் 'நீதான் ராஜா' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
விசாரணைக்குப் பின்னர் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலிசார், அவர்களிடம் இருந்த ஒரு காரையும் சிறிய வேனையும் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சகோதரர்கள், சாலை களில் படுத்திருக்கும் ஆடுகளைக் கடத்தி அவற்றை விற்று அதில் கிைடக்கும் பணத்தை வட்டிக்கும் விட்டுச் சம்பாதித்துள்ளனர். இந்த சம்பாத்தியத்தில் 'நீதான் ராஜா' என்ற திரைப்படம் ஒன்றையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த மஞ்சம்பாக்கம் பகுதியில் ஆடுகள் வளர்த்து வரும் பழனி என்பவர், திடீரென ஓர் ஆடு மாயமானதை அடுத்து கடந்த மாதம் மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிசார், காரில் வந்த இருவர், சாலையில் படுத்திருந்த ஆட்டை லாவகமாக பிடித்துச் செல்வது தெரியவந்தது.
மிடுக்காக ஆடை அணிந்தி ருந்தவர்களைப் பிடித்து போலிசார் விசாரித்ததில், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த நிரஞ்ஜன், லெனின்குமார் என்பதும் அவர் கள் பழனியின் ஆட்டை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

