நான்கு கிளைகளுடன் அதிசய தென்னை

நான்கு கிளைகளுடன் அதிசய தென்னை

1 mins read
165a50e5-3fd5-405c-b261-46d1d9febdb3
படம்: ஊடகம் -

ஆண்­டிப்­பட்டி: பொது­வாக தென்னை மரங்­கள் நெடு­நெடு வென்று உயர்ந்து வள­ரும். இப்­போது, நமது கைக­ளால் பறிக்­கும் அள­வுக்கு குட்டை தென்னை மரங்­க­ளி­லும் தேங்­காய்கள் காய்த்­துக் குலுங்­கு­கின்­றன.

தென்­னை­ம­ரத்­துக்கு கிைள யில்லை என்­பது பால பாடம். ஆனால், ஆண்­டிப்­பட்டி அருகே நான்கு கிளை­க­ளி­லும் தேங்­கா­யுடன் காணப்­படும் அதி­சய தென்­னையை ­மக்­கள் பல­ரும் வியப்­பு­டன் பார்த்­துச் செல்­கின்­ற­னர்.

தேனி மாவட்­டம், ஆண்­டிப்­பட்டி அருகே உள்ள கரட்­டு­பட்­டி­யைச் சேர்ந்­த­வர் தவச்­செல்­வம். விவ­சாயி யான இவ­ரது தென்­னந்­தோப்­பில் ஏரா­ள­மான மரங்­கள் உள்­ளன. அவற்­றில் ஒரு தென்னை மரம் மட்­டும் குறிப்­பிட்ட உய­ரத்­திற்கு வளர்ந்து நான்கு கிளை­க­ளா­கப் பிரிந்­துள்­ளது. அத்­து­டன், இதை சிலர் புகைப்­ப­டம் எடுத்து அதை சமூக வலைத்தளங்­க­ளி­லும் பகிர்ந்து "அதி­சய தென்னை," என்று பதி­விட்­டுள்­ள­னர்.

இது­கு­றித்து விவ­சாயி தவச் செல்­வம் கூறு­கை­யில், "பொது­வாக ஒரு­சில மரங்­கள் வளைந்து, வளைந்து வள­ரும். இன்­னும் சில மரங்­கள் குறுக்­கு­வாக்­கில் சென்று காய் காய்க்­கும். சில மரங்­களில் இரு கிளை­கள் இருப்­ப­தைப் பார்த்­துள்­ளோம். ஆனால், நான்கு கிளை­க­ளைக் கொண்ட தென்­னை­யைப் பார்த்து பல­ரும் வியந்­த­னர். கிளை­கள் பிரிந்­ததை பார்க்­கும்­போது மரமே சூலா­யு­தம் போன்று உள்­ளது. இந்த மரத்தை நாங்­கள் சாமி­யாக வணங்கி வரு­கி­றோம். இது மூட­நம்­பிக்கை அல்ல என்­பது நிச்­ச­யம்," என்­றார்.

ஆண்டிப்பட்டி அருகே நான்கு கிளைகளைக் கொண்ட அதிசய தென்னையை பொதுமக்கள் பலரும் வியந்து பார்த்து செல்கின்றனர். அந்த நான்கு கிளைகளிலும் தேங்காய் களும் காய்த்துள்ளது வியப்ைபக் கூட்டி உள்ளது.