தமிழகத்தில் உள்ள அைனத்துத் திரையரங்குகளும் அருங்காட்சியகங்களும் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அத்துடன், பொழுதுபோக்குப் பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்டம் நடத்தப்படும் கூடங்கள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட பலவும் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படுகின்றன.
இத்தருணத்தில் தீபாவளி விடுமுறையும் இணைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா கிருமித் தாக்கத்தில் இருந்து மாநில மக்களைப் பாதுகாக்கும் விதமாக, கடந்த மாா்ச் மாதம் முதல் ஊரடங்கு நடப்பில் இருந்து வருகிறது.
இதைத்தொடா்ந்து, திரை அரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த ஊரடங்கு கட்டுப் பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 997 திரையரங்குகள் உள்ளன. இவற் றில் ஆண்டுக்கு சராசரியாக ஏறக் குறைய 300 தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்த திரையரங்கு கள் மூடப்பட்டதால் பெரும் இழப் பைச் சந்தித்து வந்த பல்வேறு தரப்பினரும் இப்போதுதான் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இருப்பினும், 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தும்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வி.பி.எஃப். கட்டணம் கட்டமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் புதுப்பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மீண்டும் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதிலும் இன்னும் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட படங்களை மீண்டும் வெளியிடு வதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள வெண்கல காட்சிக் கூடம். இந்தக் காட்சியகத்தில் உலகின் மிகச்சிறந்த வெண்கலத் தொகுப்புகள் இடம்ெபற்றுள்ளன. படம்: ஊடகம்

