'அடுத்தாண்டு மே மாதம் வரை சென்னையில் தண்ணீர் பஞ்சமில்லை'

'அடுத்தாண்டு மே மாதம் வரை சென்னையில் தண்ணீர் பஞ்சமில்லை'

2 mins read
45f2d1be-c093-4ba8-abbf-092d5340fbd0
படம்: ஊடகம் -

சென்­னைக்கு குடி­நீர் வழங்­கும் நான்கு ஏரி­க­ளி­லும் போதிய அள­வில் தண்­ணீர் இருப்பு உள்­ள­தால், அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்­னை­யில் குடி­நீர் தட்­டுப்­பாடு வரு­வ­தற்கு வாய்ப்பே இல்லை என்று சென்­னை குடிநீா் வாரிய உயர் அதி­கா­ரி­கள் உறுதிபட தெரி­வித்­துள்­ள­னர்.

தண்­ணீர்ப் பஞ்­சத்­தால் தலை­நகர் சென்­னை­யும் அதி­கம் பாதிக்கப்­ப­டு­வது உண்டு.

ஆண்­டு­தோ­றும் கோடைக்­காலங்களில் மக்­கள் குடங்­களைத் தூக்­கிக்­கொண்டு சாலைசாலையாக அலைந்து கொண்­டி­ருப்­ப­தையும் காண­ மு­டி­யும். ஆனால், வரும் மாதங்­களில் இந்த சிர­மங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

சென்­னைக்கு குடி­நீர் வழங்­கும் முக்­கிய ஏரி­க­ளான செம்­பரம்­பாக்­கம், சோழ­வ­ரம், பூண்டி, செங்­குன்­றம் ஆகிய ஏரி­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

இத­னால், இந்த ஏரி­களில் போது­மான அள­வு தண்­ணீர் இருப்பு அதி­க­ரித்­துள்ளதால், அடுத்­தாண்டு மே மாதம் வரை சென்­னைக்கு தண்­ணீர் பஞ்­சம் ஏற்­ப­டாத ஒரு சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை இந்­தாண்டு தென்­மேற்கு பரு­வ­மழை­யால் கிடைத்த நீரினாலும் ஆந்­தி­ரா­வின் கிருஷ்ணா நதி­யில் இருந்து திறந்­து­வி­டப்­பட்­ட­ 4 டிஎம்சி தண்­ணீரா­லும் பூண்டி, சோழ­வ­ரம், புழல், செம்­பரம்­பாக்­கம் ஏரி­களில் நீர் இருப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இந்த நான்கு ஏரி­களிலும் 11,257 மில்­லி­யன் கன­அடி நீர் இருப்பு வைக்­க­மு­டி­யும். இவற்றில் தற்­போது 6,251 மில்­லி­யன் கன அடி நீர் இருப்பு உள்­ளது. கடந்த ஆண்டு 3,009 மில்­லி­யன் கன அடி நீர் மட்­டுமே இருப்பு இருந்­தது.

தற்­போதுள்ள நீரை வைத்து அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்­னைக்கு தேவை­யான நீரை வழங்கமுடி­யும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்துள்ளனர்.