தமிழன் தொலைக் காட்சி செய்தியாளர் மோசஸ், 28, மாநிலத்தில் நடக்கும் சட்ட விரோதச் செயல்களைப் புட்டுபுட்டு வைத்ததால் கும்பல் ஒன்று அவரை வெட்டிப் படுகொலை செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி ஆகிய மூவர் கைதாகி உள்ளனர். அத்து டன், தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணி என்பவரையும் போலிசார் தேடி வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் படு கொலைச் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்த மன்றத் தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், "செய்தியை வெளியிட்டதற் காகப் படுகொலை எனில், தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு அந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துெகாள்ளலாம்.
"தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிறப்புப் பார்வை' எனும் நிகழ்ச்சியில் நில அபகரிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரே காரணத் துக்காக சமூக விரோதிகள் மோசசை கொலை செய்துள்ளனர்.
"உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சமூக விரோதக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க உத்தரவிட வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். மோசஸ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் இழப்பீடு வழங்கவேண்டும்," என பாரதி தமிழன் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"பத்திரிகையாளர்கள், ஊடகத் தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமலும் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடி," என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்," என்று வலியுறுத்தி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மோசஸ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
மோசசின் உயிருக்கு அச்சுறுத் தல் இருப்பதாக காவல்துறையில் அவரது தந்தை முன்பே புகாரளித்தும் தக்க நடவடிக்கை எடுக்கா மல் காவல்துறை அலட்சியம் காட்டி யதன் விளைவாகவே ஓர் உயிர் அநியாயமாகப் போயுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் அறிக்கையில், "மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கே இந்த நிலை என்றால் சராசரி மக்களின் நிலை என்ன? இதுபோன்ற நிலையைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.
நில அபகரிப்பு குறித்த சில தகவல்களை என் மகன் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தினார். அதிலிருந்து சிக்கல்கள் எங்களைத் துரத்த ஆரம்பித்தன. அதே கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதையும் மோசஸ் சுட்டிக்காட்டியதால் கொல்லப்பட்டுள்ளார்.

