தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களை மரியாதையாக நடத்தவும்

2 mins read
6ca722e6-d3d2-406c-b9e1-35fb6a490071
-

தமி­ழ­கத்­தில் இருக்கும் அனைத்து காவல் நிலை­யங்­க­ளி­லும் கண்­கா­ணிப்­புப் படக்­க­ரு­வி­கள் பொருத்­தப்­பட வேண்­டும் என்று மாநில காவல்­து­றைத் தலைமை இயக்­கு­ந­ருக்கு மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

காவல் நிலை­யங்­க­ளுக்­கு வரும் பொது­மக்­க­ளைக் கண்­ணி­ய­மா­க­வும் மரி­யா­தை­யா­க­வும் தோழ­மை­யு­ட­னும் நடத்த வேண்­டும் என்று காவல்­து­றை­யி­ன­ருக்கு நீதி­மன்­றம் அறி­வு­றுத்தி இருக்­கிறது.

தூத்­துக்­குடி மாவட்­டம், சாத்­தான்­கு­ளத்­தைச் சேர்ந்த ஜெய­ரா­ஜும் அவ­ரு­டைய மகன் பென்­னிக்­சும் சில மாதங்­க­ளுக்­கு­முன் காவல்­து­றை­யி­ன­ரால் அடித்­துக் கொல்­லப்­பட்­ட­னர். இதன் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டுள்ள ஆய்­வா­ளர் ஸ்ரீதர் தாக்­கல் செய்த பிணை மனுவை நீதி­பதி எம்.எஸ்.சுப்­பி­ர­மணி­யம் நேற்று முன்­தி­னம் தள்ளு­படி செய்­தார்.

"தமி­ழ­கத்­தில்­தான் அதி­க­ள­வில் காவல் நிலைய மர­ணங்­கள் நிகழ்­கின்­றன. மனி­தத்­தன்­மை­யற்ற இந்­தக் குற்­றங்­கள் முற்­றி­லு­மாக தவிர்க்­கப்­பட வேண்­டும். இத்­த­கைய குற்­றங்­களில் தொடர்­பு­டை­யோ­ருக்­குப் பிணை வழங்­கி­னால் அது தவ­றான வழி­காட்­டு­த­லாக அமைந்­து­வி­டும்.

"பொது­மக்­களில் பலர் காவல் நிலை­யங்­க­ளுக்­குச் செல்­லவே இன்­னும் அஞ்­சு­கின்­ற­னர். எளிய மனி­தர்­கள் முறை­யாக நடத்­தப்­ப­டா­ததே இதற்­குக் கார­ணம். இது­கு­றித்­துக் காவல்­து­றைக்­குப் பல சுற்­ற­றிக்­கை­கள் அனுப்­பி­யும் அதை அவர்­கள் பின்­பற்­று­வ­தில்லை," என்று நீதி­பதி சொன்­னார்.

அத்­து­டன், காவல்­து­றைக்­குப் பல உத்­த­ர­வு­க­ளை­யும் அறி­வு­றுத்­தல்­க­ளை­யும் அவர் பிறப்­பித்­தார்.

"எல்­லாக் காவல் நிலை­யங்­களி­லும், புகார் அளிக்க வரு­வோ­ரின் உரி­மை­கள் குறித்து காவல் நிலை­யங்­க­ளுக்குமுன் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் தக­வல் பலகை வைக்க வேண்­டும். அனைத்­துக் காவல் நிலை­யங்­களி­லும் கண்­கா­ணிப்­புப் படக்­கருவி­க­ளைப் பொருத்தி, அவை முறை­யாக இயங்­கு­வதை உறு­தி­செய்ய வேண்­டும். கருவி பழு­தா­னால், மூன்று நாள்­க­ளுக்­குள் அது சரி­செய்­யப்­பட வேண்­டும். தவ­றி­னால் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும்.

"குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளைக் காவ­லில் வைக்க காவல்­துறை வாக­னங்­கள் மூலமே அழைத்­துச் செல்ல வேண்­டும். தனி­யார் வாக­னங்­களை ஏற்­பாடு செய்­தால் அதற்­கான செல­வைக் காவல்­து­றையே ஏற்க வேண்­டும்," என்று நீதி­பதி சுப்­பி­ர­ம­ணி­யம் உத்­த­ர­விட்டு இருக்­கி­றார்.