மூன்று தலையுடன் கூடிய கன்றை பசு ஈன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆத்தூர் அருகே கொசவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயியான அவர், தமது தோட்டத்தில் ஆடு மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
சில நாள்களுக்குமுன் மாரிமுத்து வாங்கி வந்த பசு, நேற்றுக் காலையில் ஒரு கன்றை ஈன்றது. அக்கன்று மூன்று தலையுடன் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்தத் தகவல் வேகமாகப் பரவ, அக்கம்பக்கத்தில் இருந்து ஏராளமானோர் வந்து அக்கன்றுக்குட்டியைப் பார்த்துச் சென்றனர். ஆனாலும், சிறிது நேரத்தில் அது இறந்துவிட்டது.
தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள், அந்தக் கன்றுக்குட்டியை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

