சென்னை யானைகவுனிபகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த், 74, யானைகவுனியில் 'பைனான்ஸ்' தொழில் செய்து வந்தார். புதன்கிழமை இரவு இவரை தொடர்புகொள்ள முடியாததால் இவரது மகள் பிங்கி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது தலில் சந்த் அவரது மனைவி புஷ்பா பாய், 70, மற்றும் மகன் ஷீத்தல், 42, ஆகியோர் கொலைசெய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.
தலில் சந்த் கன்னத்திலும் தாய் புஷ்பா பாய் நெற்றியிலும் சகோதரர் ஷீத்தல் உச்சம் தலையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு மகள் பிங்கி அதிர்ச்சியில் உறைந்தார். தகவல் அறிந்த சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஷீத்தலுக்கு மணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியைப் பிரிந்து தமது பெற்றோருடன் வாழ்ந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிள்ளை களுடன் வசித்து வருகிறது. அவருக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் பிரச்சினை நீடித்து வந்ததும் போலி சுக்குத் தெரியவந்தது.
ஜெயமாலாவின் சகோதரர்கள் இருவர் ஜீவனாம்சமாகபெரும் தொகை யும் சொத்துகளும் கேட்டு தலில் சந்த் தம்பதியரை நச்சரித்து வந்த தாகக் கூறப்பட்டது.
இதற்காக கடந்த ஓராண்டு காலத்தில் புனேயிலிருந்து 10க்கும் மேற்பட்ட முறை அவ்விருவரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி தலில் சந்த் தாமதப்படுத்தி வந்தார். கடந்த வாரம் ஜெயமாலா சகோதரர்கள் சென்னை வந்த போது தலில் சந்த், ஷீத்தல் ஆகி யோருடன் கடும் தகராற்றில் ஈடுபட்டதுடன் எச்சரித்துவிட்டும் சென்றுள்ளனர்.
இதனால் அவர்கள் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் நேரடியாக கொலையில் ஈடுபட்டார்களா? அல்லது கூலிப்படையை ஏவி கொலை செய்தார்களா? என போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு தனிப்படை போலி சார் புனே நகருக்கு விரைந்து சென்றுள்ளனர்.

