விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய தமிழக முதல்வர் பழனிசாமி பின்னர் உரையாற்றினார்.
“2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத் தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் சூழல் மாறினால் ஸ்டாலின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது,” என்று காட்டமாகக் கூறினார்.