திருவண்ணாமலை மாவட்டம் ராயம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 38. இவரது மனைவி தேவிகா, 27. இவர்களுக்கு, மீனா, 10, சிவானி, 8 என்ற இரு மகள்கள் இருந்தனர். தேவிகா, ராயம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துப்புரவுப் பணியாளராக இருந்தார்.
கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் தேவிகா ஓர் உணவத்தில் வேலை செய்யத்தொடங்கினார். அங்கு வேலைக்குச் சென்ற மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முருகன், அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். பிள்ளைகள் இரண்டும் தமக்குப் பிறந்தவர்கள் இல்லை என கூறி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் முருகன் தகராறு செய்தார். தொடர்ந்து தமது இரு மகள்களையும் கடப்பாரையால் அவர் தாக்கினார்.
தடுக்க வந்த மனைவி தேவிகாவையும் முருகன் தாக்கினார். சம்பவ இடத்திலேயே சிறுமி மீனா பலியானார்.
படுகாயமடைந்த சிவானி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேவிகா சிகிச்சை பெற்று வருகிறார். போலிசாரின் விசாரணைக்குப் பயந்த முருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கைது செய்யப் பட்ட அவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

