புது அரசியல் கட்சி; ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கும் அழகிரி

புது அரசியல் கட்சி; ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கும் அழகிரி

2 mins read
4f09368f-4005-4daa-ac52-3c865a3b7e03
மு.க. அழகிரி. படம்: ஊடகம் -

திமுக தலை­மை­யால் ஒதுக்கிவைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மு.க.அழ­கிரி புதிய அர­சி­யல் கட்சி தொடங்­கப்போவ­தாக மீண்­டும் பரபரப்புத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இதற்­கான சாத்­தியக்­கூறு­கள் இருப்­பதை அவ­ரும் மறுக்­க­வில்லை.

நேற்று முன்­தி­னம் மது­ரை­யில் தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தீவிர ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார் மு.க.அழ­கிரி.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஆத­ர­வா­ளர்­க­ளின் கருத்­து­க­ளைப் பரி­சீ­லித்த பின்­னர் புதுக்­கட்சி தொடங்­கு­வது குறித்து உரிய முடி­வெ­டுக்­கப்­படும் என்­றார்.

காலஞ்­சென்ற முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் மறை­வுக்­குப் பிறகு திமுக, அழ­கிரி இடை­யே­யான உறவு முற்றி­லு­மா­கத் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அவரை கட்­சி­யில் சேர்க்­கக் கூடாது என்­ப­தில் மு.க.ஸ்டா­லின் ஆத­ர­வா­ளர்­கள் உறு­தி­யாக உள்­ளனர்.

அழ­கிரி புதுக்­கட்சி தொடங்­கு­வார் என தொடர்ந்து அவ்­வப்­போது செய்தி வெளி­யா­வ­தும் அவரே அதை மறுப்­ப­தும் வழக்­க­மா­கி­விட்டது.

இந்­நி­லை­யில், அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் குறித்து தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் அழ­கிரி கலந்­தா­லோ­சித்­தார். பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கொரோனா விவ­கா­ரத்­தால் கடந்த சில மாதங்­க­ளாக தமது ஆத­ர­வா­ளர்­களைச் சந்­திக்க முடி­ய­வில்லை என்­றார்.

"எனது ஆத­ர­வா­ளர்­கள் என்­னி­டம் தான் உள்­ள­னர். அனை­வ­ரும் நன்­றாக உள்­ள­னர். திமு­க­வில் புகைச்­சல் அதி­க­மா­கி­யுள்­ளது.

"2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்குப் பின்­னர் திமு­க­வின் நிலையை நீங்­களே அறிந்துகொள்­ள­லாம். அது­கு­றித்து தற்­போது என்­னால் கூற முடி­யாது. ஏனெ­னில் நான் ஜோதி­டன் கிடை­யாது," என்­றார் மு.க.அழ­கிரி.

திமு­க­வில் தற்­போது உள்ள சில தலை­வர்­கள் பத­விக்­கா­க மட்­டுமே அக்­கட்­சி­யில் நீடிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், மறைந்த முன்­னாள் முதல்­வர்­கள் கரு­ணா­நிதி, ஜெய­ல­லிதா ஆகி­யோ­ருக்­குப் பிறகு தமி­ழ­கத்­தில் அர­சி­யல் வெற்­றி­டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.