50 தொகுதிகளுக்கு குறிவைக்கும் பாஜக; அதிமுக அதிருப்தி

50 தொகுதிகளுக்கு குறிவைக்கும் பாஜக; அதிமுக அதிருப்தி

2 mins read
85841820-c0b2-4560-b04f-4463e4326ec4
அமித் ஷா. படம்: ஊடகம் -

எதிர்­வ­ரும் தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் தங்க­ளுக்கு குறைந்­த­பட்­சம் ஐம்­பது தொகு­தி­களை ஒதுக்க வேண்­டும் என அதி­முக தலை­மை­யி­டம் பாஜக தேசி­யத் தலை­வர் அமித் ஷா வலி­யு­றுத்த இருப்­ப­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இத­னால் அதி­முக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­படும் நிலை­யில், பாஜ­க­வின் வேல் யாத்­தி­ரை­யைக் கடு­மை­யாக விமர்­சித்து அதி­மு­க­வின் அதி­கா­ர­பூர்வ நாளே­டான 'நமது அம்மா'வில் கட்­டுரை வெளி­யா­கி­யுள்­ளது.

மதத்­தின் பெய­ரால் நடத்­தப்­படும் வாக்­கு­வங்கி அர­சி­யலை ஏற்க முடி­யாது என்­றும் அனை­வ­ரும் தமி­ழ­கத்­தில் மக்­கள் பின்­பற்­றும் ஒற்­று­மை­யையும் ஒரு­மைப்­பாட்­டை­யும் உணர்ந்து நடக்க வேண்­டும் என்­றும் அக்­கட்­டு­ரை­யில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமி­ழக வருகை தமி­ழக அர­சி­யல் அரங்­கில் பல்­வேறு விவா­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமித் ஷா எதிர்வரும் 21ஆம் தேதி சென்னை வந்து அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி அமைப்பது, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து தமது இந்தப் பயணத்தின் மூலம் அவர் முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர­சி­யல் காய் நகர்த்­தல்­களில் ஒன்­றாக, இம்­முறை சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் அதி­முக கூட்­ட­ணி­யில் இடம்­பெற வேண்­டு­மா­னால் பாஜ­க­வுக்கு குறைந்­தது ஐம்­பது தொகு­தி­க­ளா­வது ஒதுக்க வேண்­டும் என்­பது அமித் ஷாவின் முக்­கிய நிபந்­த­னை­யாக இருக்­கும் என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள்.

அண்­மை­யில் பீகார் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பாஜக பெற்­றுள்ள வெற்றி அக்­கட்­சிக்கு கூடு­தல் பலம் சேர்க்­கும் அம்­ச­மாக இருக்­கும் என்­றும் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

ஆனால் பாஜ­க­வின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டால், தற்­போது அதி­மு­க­வு­டன் நட்­பு­ற­வு பாராட்டி வரும் மற்ற கட்­சி­களும் அதிக தொகு­தி­க­ளைக் கேட்டு நச்­ச­ரிக்­கும் என்­பதே அக்­கட்­சி­யின் கவ­லை­யாக உள்­ளது.

இந்­நி­லை­யில் பாஜ­க­வின் வேல் யாத்­தி­ரைக்கு அதி­முக அரசு முத­லில் தடை­வி­தித்­தது. பாஜ­க­வி­னர் தடையை மீறி யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தால் ஆங்­காங்கே அக்­கட்சி நிர்­வா­கி­கள் பல­ரும் கைதாகி உள்­ள­னர்.

இத­னால் பாஜக தலைமை அதி­முக மீது கடும் அதி­ருப்­தி­யில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத்­த­கைய சூழ­லில் தமி­ழ­கத்­துக்கு வருகை தர உள்­ளார் அமைச்­சர் அமித் ஷா.

அவ­ரது வரு­கை­யைக் கண்டு யாரும் அச்­ச­ம­டை­யத் தேவை­யில்லை என தமி­ழக பாஜக நிர்­வா­கி­கள் சிலர் எதிர்க்­கட்­சி­களை கிண்­ட­ல­டித்­துள்­ள­னர்.ஆனால் அதி­முக தரப்­பிலோ, பாஜக ­வுக்குப் பதி­லடி தரப்பட்­டுள்­ளது.

"கருப்­பர் கூட்­ட­மா­னா­லும் சரி. காவிக்கொடி பிடிப்­ப­வர்­களானா­லும் சரி, மத அர­சி­ய­லுக்கு தமிழகத்தில் இட­மில்லை" என்று நமது அம்மா நாளேட்­டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐம்­பது தொகுதி வேண்­டும் என்ற முடி­வு­டன் தமி­ழ­கத் தேர்­த­லுக்­காக கள­மி­றங்கி உள்­ளார் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா.

இந்­தக் கோரிக்­கையை எதிர்­கொண்டு சமா­ளிப்­ப­தற்­கான ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டுள்­ளது அதி­முக தலைமை.

இதற்கிடையே பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட் டால் தங்களுக்கும் அக்கட்சியை விட அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக வும் கூறப்படுகிறது.