தமிழகத்தில் வெறிச்சோடிய திரையரங்குகள்: 80% இருக்கைகள் காலியாக உள்ளன

தமிழகத்தில் வெறிச்சோடிய திரையரங்குகள்: 80% இருக்கைகள் காலியாக உள்ளன

1 mins read
ea2d41a0-5580-4547-84a5-ddedc23a8188
கொரோனா கிருமித்தொற்று குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்பில் இந்த விழிப்புணர்வு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.படம்: தகவல் ஊடகம் -

தமி­ழ­கத்­தில் திரை­யரங்கு­களைத் திறக்க அரசு அனு­ம­தித்­துள்ள நிலை­யில், பெரும்­பா­லான திரை­ய­ரங்­கு­கள் பார்­வை­யா­ளர்­கள் இன்றி வெறிச்­சோ­டிக் காணப்­படுகின்றன.

தீபா­வ­ளி­யை­யொட்டி திரை­யரங்கு­க­ளைத் திறக்­க­லாம் என தமி­ழக அரசு அண்­மை­யில் அறி­வித்­தது. எனி­னும் 50% இருக்­கை­களை மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு நிபந்தனை­கள் விதிக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து சுமார் எட்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு கடந்த 10ஆம் தேதி திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டன. தமி­ழ­கம் முழு­வ­தும் சுமார் 1,140க்கும் மேற்­பட்ட திரை­ய­ரங்­கு­கள் உள்­ளன. அவற்­றுள் சுமார் 800 திரை­ய­ரங்­கு­கள் இன்­னும் திறக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில் தீபா­வ­ளி­யை­யொட்டி ஏழு புதிய தமிழ்க் திரைப்­படங்­கள் வெளி­யா­கின. ஆனால் முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­கள் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு கண்­ட­தால், திரை­ய­ரங்­குக்கு வருகை தரும் ரசி­கர்­கள், பார்­வை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பெரும் சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

எண்­பது விழுக்­காடு இருக்­கை­கள் காலி­யா­கவே உள்­ளன. இத­னால் கடும் நஷ்­டத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் பல­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் கொரோனா நோய்த்தொற்று இரண்­டாம் அலை வீச வாய்ப்­பில்லை என சுகா­தார செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கிறது என்று சுட்­டிக்­காட்­டிய அவர், பிற மாநி­லங்­களை ஒப்­பி­டு­கை­யில் தமி­ழ­கத்­தில் நோய்த்­தொற்று முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டுக்­குள் உள்­ளது என்­றார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,819 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். அதேசமயம் ஒரே நாளில் 2,520 பேர் கொவிட்-19 பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று மாநில சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.