பொள்ளாச்சி அருகே வசிக்கும் மக்கள் குரங்குகள் படுத்தும் தொல்லை தாங்கமுடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களின் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து குறும்பு செய்யும் குரங்குகளைக் கட்டுப்படுத்த ஒரு புது யுக்தியையும் இப்போது கையாண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நவமலை வனக்கிராம மக்கள், குரங்குகளைத் தங்களது குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரவிடாமல் தடுக்க தங்களது வீடு, கடைகளின் வாசலில் புலி பொம்மையை வைத்து குரங்குகளைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்தப் புலி பொம்மையைப் பார்க்கும் குரங்குகள் அது உண்மை புலி என்று நினைத்து பயத்தில் தெறித்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
நவமலை பகுதியில் மலை அடிவாரத்தில் வசிக்கும் கிராம மக்கள் தங்களது வீடுகள், கடைகள் ஆகியவற்றில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதாக புகார்கள் கூறினர். இந்தப் பிரச்சினைக்கு வனத்துறை, காவல்துறை அதிகா ரிகளால் கூட ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்கள் இப்போது இந்த புலி பொம்மைகளால் நிம்மதி அடைந்துள்ளனர்.

