பரிமாறிய உணவில் கண்ணாடித் துண்டுகள்; மருத்துவமனையில் ஆறு பேருக்கு சிகிச்சை

1 mins read
775702d3-9927-46f0-b4fa-39da4a7d951d
உணவில் கிடந்ததாகக் கூறப்படும் கண்ணாடித் துண்டுகள். படம்: தமிழக ஊடகம் -

வேலூ­ரில் ஹோட்­டல் ஒன்­றில் நடத்­தப்­பட்ட திரு­மண நிச்­ச­ய­தார்த்த நிகழ்­வில் கலந்து கொண்ட விருந்­தி­னர்­க­ளுக்கு பரி­மா­றப்­பட்ட உண­வில் கண்­ணா­டித் துண்­டு­களும் கிடந்­துள்­ளன.

இந்த உண­வைச் சாப்­பிட்ட ஆறு பேருக்கு வயிறு எரிச்­சல், தொண்டை வலி இருந்­த­தால் வேலூ­ரில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

அத்­து­டன், அதிர்ச்­சி­யூட்­டும் இச் சம்­ப­வம் குறித்து காவல் நிலை­யத்­தி­ல் புகாரும் அளித்­துள்­ள­னர்.

வேலூர், சத்­து­வாச்­சா­ரியை அடுத்த அல­மேலு மங்­கா­பு­ரத்­தைச் சேர்ந்த ஒரு பெண்­ணுக்குத் திருமண நிச்­ச­ய­தார்த்த நிகழ்ச்சி சத்து வாச்­சா­ரி­யில் உள்ள ஒரு ஹோட்­ட­லில் நேற்று முன்­தி­னம் நடந்­தது. காலை­யில் நிச்­ச­ய­தார்த்­தம் முடிந்­த­தும் 100க்கும் மேற்­பட்ட விருந்­தி­னர்­க­ளுக்கு மதிய உணவு பரி­மா­றப்­பட்­டது. அப்­போது, ஒரு­வ­ரது இலை­யில் கண்­ணா­டித் துகள்­களும் துண்டுகளும் கிடந்­தன.

இது­கு­றித்து பெண் வீட்­டார் கூறு­கை­யில், "ஓட்­ட­லில் பரி­மா­றப்­பட்ட உணவைச் சாப்­பி­டும்­போது இலை­யில் கண்­ணாடித் துண்­டு­கள் காணப்­பட்­டது. அவை அனைத்­தும் டியூப் லைட்­டில் இருந்து உடைந்த பாகங்­கள். ஓட்­டல் சமை­யல் அறை­யில் இருந்த டியூப்­லைட் உடைந்து உண­வில் விழுந்­துள்­ளது. இதனை ஓட்­டல் ஊழி­யர்­கள் கவ­னிக்க வில்லை. அவர்­கள் அலட்­சி­ய­மாக பதில் தெரி­வித்­த­னர்," என்­ற­னர்.