நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அரியவகை கடற்பன்றி இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிறன்று தெரியவந்தது.
இத்தகவலை அடுத்து சதீஷ் தலைமையிலான கோடியக்கரை வனத்துறையினர் கடற்பன்றி இறந்துள்ள இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். விசாரணையில் அது அரியவகை பாலூட்டி உயிரினமான கடற்பன்றி என்பது தெரியவந்தது.
சுமாா் 4 அடி நீளம், 60 கிலோ எடையில் இருந்த இந்தக் கடற்பன்றியை கால்நடை மருத்துவா் செந்தில் தலைமையிலான குழுவினா் உடற்கூறாய்வு செய்தனா்.
இந்தக் கடற்பன்றி கடல் சீற்றத்தால் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் பெரிய படகு அல்லது கப்பலின் விசிறியில் சிக்கி வால்பகுதி துண்டிக்கப்பட்டதால் கடற்பன்றி உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவா் தெரிவித்தாா்.
ஆய்வுக்குப் பிறகு கடற்பன்றியின் சடலம் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
பாலூட்டி இனமான கடற்பன்றிகளில் கோடியக்கரையில் கரை ஒதுங்கியது துடுப்பில்லா கடற்பன்றி வகையைச் சேர்ந்தது. ஃபின்லெஸ் போா்பாய்ஸ் என அழைக்கப்படும் இந்த இன கடற்பன்றிகளைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அழிய வாய்ப்புள்ள அரிய இனமாக குறிப்பிட்டுள்ளது.