கரையோரம் ஒதுங்கிய அரியவகை கடற்பன்றி

நாகை மாவட்­டம், வேதா­ரண்­யத்தை அடுத்த கோடி­யக்­கரை கடற்­கரையில் அரி­ய­வகை கடற்­பன்றி இறந்த நிலை­யில் கரை ஒதுங்­கி­யது ஞாயி­றன்று தெரி­ய­வந்­தது.

இத்தக­வலை அடுத்து சதீஷ் தலை­மை­யி­லான கோடி­யக்­கரை வனத்­து­றை­யினர் கடற்பன்றி இறந்துள்ள இடத்துக்குச் சென்று பாா்வையிட்­டனா். விசா­ர­ணை­யில் அது அரி­ய­வகை பாலூட்டி உயி­ரி­ன­மான கடற்­பன்றி என்­பது தெரி­ய­வந்­தது.

சுமாா் 4 அடி நீளம், 60 கிலோ எடை­யில் இருந்த இந்தக் கடற்­பன்றியை கால்­நடை மருத்­துவா் செந்­தில் தலை­மை­யி­லான குழு­வினா் உடற்­கூ­றாய்வு செய்­தனா்.

இந்தக் கடற்­பன்றி கடல் சீற்­றத்­தால் இப்­ப­கு­திக்கு வந்­தி­ருக்­க­லாம் என்றும் பெரிய படகு அல்­லது கப்­ப­லின் விசி­றி­யில் சிக்கி வால்­ப­குதி துண்­டிக்­கப்­பட்­ட­தால் கடற்­பன்றி உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் எனவும் மருத்­துவா் தெரி­வித்தாா்.

ஆய்­வுக்குப் பிறகு கடற்­பன்­றி­யின் சட­லம் கடற்­க­ரை­யில் புதைக்­கப்­பட்­டது.

பாலூட்டி இன­மான கடற்­பன்­றி­களில் கோடி­யக்­க­ரை­யில் கரை ஒதுங்­கி­யது துடுப்­பில்லா கடற்­பன்றி வகை­யைச் சேர்ந்தது. ஃபின்லெஸ் போா்பாய்ஸ் என அழைக்­கப்­படும் இந்த இன கடற்­பன்­றி­களைப் பன்­னாட்டு இயற்­கைப் பாது­காப்­புச் சங்­கம் அழிய வாய்ப்­புள்ள அரிய இன­மாக குறிப்­பிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!