சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பயணம் செல்ல இருந்த விமானத்தின் விமானிக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவரை திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விமானியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி னர். ஒருவேளை, விமானம் புறப்பட்டு, நடுவானில் செல்லும் வேளையில் விமானிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், முன்னதாகவே விமானிக்கு ெநஞ்சுவலி ஏற்பட்டதால், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 42 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளது.
இதற்காகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விருது வழங்க இருந்தார்.
காணொளி வழி நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்தபடி கலந்துகொள் வதற்காக விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையம் வந்தார்.
நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
அதையடுத்து, உடனடியாக புதுக்கோட்டை திரும்பிய அமைச்சர் விஜயபாஸ்கர், காணொளிக் காட்சி மூலம் மத்திய அமைச்சரிடம் விருதைப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.