திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நேரலையில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 29) அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு தீப திருவிழாவில் நேரடியாகப் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும்.

அதேநேரத்தில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின்மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்து சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுக்காக ‘மூலவர்க பரம்பரா’ (MULAVARGA PARAMPARA) அமைப்பினர், நிகழ்வின் நேரலைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிவபெருமானின் ஆறாவது முகமாக ‘அதோமுகத்தை’ப் பிரதிபலிக்கும் இறுதி தீபம் திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் நிகழ்வாக இது உள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணிக்கு தீபம் ஏற்றப்படுவதை இந்த நேரலை காணொளியில் நீங்கள் ‘மூலவர்க பரம்பரா’ பேஸ்புக் மற்றும் யூடியுப் பக்கங்களிலும் மலேசியாவின் ‘ஏஷ்ட்ரோ’ ஒளிவழியிலும் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!