தூத்துக்குடியில் மனிதர்களைப் போலவே கோவில் யானை ஒன்று இட்லி, வடை சாப்பிட்டு, 'ஃபில்டர் காபி' அருந்தும் காெணாளிப் பதிவு சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆதிநாயகி என்ற யானை உள்ளது.
இந்த யானையைப் பராமரித்து வரும் பாகன், அதைத் தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்வதும், அதன்பிறகு அதைக் குளிக்கவைத்து அழைத்து வருவதும் வழக்கம்.
அப்படி ஆலயத்திற்குத் திரும்பும் வழியில், அங்குள்ள உணவகத்தில் பாகன் தான் மட்டும் சாப்பிட்டு, 'ஃபில்டர் காபி' அருந்தாமல் அந்த யானைக் கும் வாங்கிக்கொடுப்பார்.
உணவகத்தில் யானைக்கு வாங்கிக்கொடுக்கும் 'ஃபில்டர் காபி' சூடாக இருப்பதால் அதை நன்கு ஆற்றி யானைப்பாகன் யானைக்கு கொடுக்கிறார். அந்த யானையும் 'ஃபில்டர் காபியை ஆர்வத்துடன் விரும்பிப் பருகுகிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
கோவில் யானை 'ஃபில்டர் காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் வியந்து பார்ப்பதையும் காணமுடிகிறது.