சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கட்சியில் இணைந்த உடனேயே அவரை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு எட்டு ஆண்டுகள் உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.
ஐ.டி துறையின் முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அவர் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர். மேலும் அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பட்டம் பெற்றவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், அவருக்கு “தமிழகத்தின் பெருமை” என்ற விருதும் வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டில், இவரது தலைமையில் சென்னை பூம்புகார் நிலையம தேசிய மின்-ஆளுகை விருதையும், ஸ்கோச் ஸ்மார்ட் கவர்னன்ஸ் பிளாட்டினம் விருதையும் வென்றது. சந்தோஷ் பாபு வகித்த ஒவ்வொரு பதவியிலும், தனது அயராத உழைப்பாலும் முயற்சியாலும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.