விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் மீது அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பாலியல் புகார்

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தின் பார­திய ஜனதா கட்­சி­யின் தலை­வர் வி.ஏ.டி.கலி­வ­ர­தன், தன்னை ஓர் அறையில் அடைத்து வைத்து பல­முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­து­டன் கொலை மிரட்­டல் விடுத்­த­தாக அக்­கட்­சி­யின் மக­ளிர் அணி­யின் பொதுச் செய­லா­ளர் காயத்ரி கட்­சித் தலை­மைக்­குப் புகார் அளித்­துள்­ளார்.

மக­ளிர் அணி பொதுச் செய­லா­ளர் காயத்ரி என்­ப­வர் கட்­சி­யின் தலை­மைக்கு அளித்த புகார் கடி­தம் சில தினங்­க­ளுக்கு முன்பு வெளி­யா­னது.

அந்­தக் கடி­தத்­தில், “மாவட்ட பாஜக தலை­வ­ரான வி.ஏ.டி கலி­வ­ர­தன் கட்­சி­யில் தனக்கு பதவி கொடுப்­ப­தா­கக் கூறி ரூ.5 லட்­சம் பணம் வாங்­கிக்­கொண்­ட­து­டன், தன்னை பல­முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தார். அதைப்­பற்றி வெளி­யில் சொன்­னால் என்னை கொலை செய்­து­வி­டு­வ­தாக மிரட்­டு­கி­றார்” என்று எழுதி காயத்ரி என்ற பெய­ரில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருந்­தது.

ஊட­கங்­களில் செய்­தி­கள் வெளி­வந்­த­போ­தும், அந்­தக் கடி­தம் குறித்து காயத்ரி அப்­போது எந்­தக் கருத்­தை­யும் தெரி­விக்­காத நிலை­யில், அது பொய்ப் புகார் என்று ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தி­ருந்­தார் வி.ஏ.டி கலி­வ­ர­தன். அதே­போல காயத்­ரி­யும், கலி­வ­ர­த­னும் பேசிக்­கொள்­வ­தாக ஆடியோ ஒன்று வெளி­யா­னது.

இந்த நிலை­யில் காயத்ரி, நேற்று வி.ஏ.டி.கலி­வ­ர­தன் தனக்கு கொலை மிரட்­டல் விடுக்­கி­றார் என்று விழுப்­பு­ரம் மாவட்ட எஸ்.பியி­டம் புகார் அளித்­தி­ருக்­கி­றார். அந்த புகார் கடி­தத்­தில், “தற்­போது விழுப்­பு­ரம் மாவட்ட பா.ஜ.க தலை­வ­ராக இருக்­கும் வி.ஏ.டி. கலி­வ­ர­தன், எனக்கு கள்­ளக்­கு­றிச்சி மாவட்ட மக­ளிர் அணித் தலை­வர் பதவி வாங்­கித் தரு­கி­றேன் என்று கூறி என்­னி­டம் ரூ. 5 லட்­சம் பணம் வாங்கி ஏமாற்­றி­விட்­டார்.

முடக்­கு­வாத சிகிச்­சைக்­காக நான் சென்னை சென்­று­கொண்­டி­ருந்­த­போது, என்னை வழி­ம­றித்து, நல்ல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதாகக் கடத்­திச்­சென்று தெரி­யாத ஒரு இடத்­தில் என்னை அடைத்து வைத்­தார். இரண்டு மணி நேரத்­திற்குப் பிறகு அந்த அறைக்கு வந்த வி.ஏ.டி கலி­வ­ர­தன் `இப்போ என் ஆசைக்கு இணங்­க­வில்லை என்­றால் உன்­னை­யும் உன் குடும்­பத்­தை­யும் கொலை செய்­து­வி­டு­வேன்’ என்று மிரட்­டி­னார்.

“அதன்­பி­றகு என்னை பாலி­யல் வன்­முறை செய்த அவர், இரண்டு நாள்­கள் என்னை அடைத்­து­வைத்து பல­முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தார்.

“அது­மட்­டு­மல்­லா­மல் அத­னைப் படம் எடுத்து வைத்­தி­ருப்­ப­தா­க­வும், அத­னால் அவர் கூப்­பி­டும்­போ­தெல்­லாம் அவ­ரது ஆசைக்கு இணங்க வேண்­டும் என்­றும் இல்­லை­யென்­றால் வீடி­யோவை அனை­வ­ருக்கும் அனுப்­பி­வி­டு­வேன் என்­றும் மிரட்­டி­னார். நான் கொடுத்த பணத்­தை­யும் திருப்­பிக்கொடுக்­காத அவர், பாஜக-வில் இப்­போது ரொம்ப பலமா இருக்­கேன்.

“என்னை யாரும் ஒன்னும் செய்துவிட முடியாது. மறுபடியும் என்னிடம் பணம் கேட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக தொடர்ச்சியாக மிரட்டி வரும் அவர் மீது நடவடிக்கை எடுங்கள்,” என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!