தெளிவான முடிவை அறிவிக்காவிடில் உயிரை விடுவேன் என ரஜினி ரசிகர் மிரட்டல்

2 mins read
e5fe26ee-4020-4ed6-9f6c-7951e7f0ae8a
ரஜினி மக்­கள் மன்­றத்­தின் மாவட்­டப் பொறுப்­பா­ளர்­கள் கூட்­டத்தில் கலந்துகொண்ட ரசிகர்கள். படம்: ஊடகம் -

அர­சி­ய­லுக்கு வரு­வேன் என்று சொல்லி நீண்ட நாட்­க­ளா­கி­யும் இன்­னும் நடி­கர் ரஜி­னி­காந்த் எந்த ஒரு தெளி­வான முடி­வை­யும் அறி­விக்­கா­மல் இழுத்­த­டித்து வரு­வ­தால், தனது உயிரை மாய்த்­துக் கொள்­ளப்போவ­தாக அவ­ரது ரசி­கர் ஒரு­வர் மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

ரஜி­னி­காந்­தின் அர­சி­யல் பிர­வே­சம் என்­பது தமி­ழக மக்­க­ளால் தொடர்ந்து பேசப்­பட்டு வரும் ஒரு விஷ­ய­மாகி வரு­கிறது.

இது­வரை அர­சி­யல் கட்சி எப்­போது தொடங்­கப்­படும் என்றோ, முழு­நேர அர­சி­யல் பிர­வே­சம் குறித்தோ ரஜினி எந்த ஓர் அறி­விப்­பை­யும் வெளி­யி­ட­வில்லை.

அண்­மை­யில் ெசன்­னை­யில் நடந்த ரஜினி மக்­கள் மன்­றத்­தின் மாவட்­டப் பொறுப்­பா­ளர்­கள் கூட்­டத்தில் பேசிய ரஜினி, "தனது அர­சி­யல் பிர­வே­சம் பற்­றிய முடிவை எவ்­வ­ளவு சீக்­கி­ரம் முடி­யுமோ, அவ்­வ­ளவு விரை­வில் அறி­விப்­பேன்," என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், தஞ்சை மாவட்­டம், பட்­டுக்­கோட்டை ரசி­கர் மன்ற நக­ரச் செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தனது டுவிட்­டர் பதிவில், "மக்­கள் தலை­வர் அர­சி­ய­லுக்கு வர­மாட்­டார் என்ற சூழ்­நிலை நில­வு­கிறது. அறி­விப்பு வர­வில்லை என்­றால் உயிரை விடு­வேன். என்­றும் மக்­கள் தலை­வர் வழி­யில்," எனப் பதி­விட்­டி­ருந்­தார்.

அதன்­பின்­னர், சில மணி நேரத்­தில், "அனை­வ­ரும் மன்­னிக்க வேண்டும். மன உளைச்­ச­லால் இப்­படி ஒரு பதி­வைப் போட்­டு­விட்­டேன். தஞ்சை மாவட்­டத் தலை­வர் என்­னி­டம் பேசி, 'தலை­வர் நிச்­ச­யம் அர­சி­ய­லுக்கு வரு­வார்' என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். களப்­பணி செய்­த­வ­ருக்குத் தான் அந்த வலி தெரி­யும்," எனப் பதி­விட்டு இருந்­தார்.

இதற்கிடையே, "ரஜினியுடனான என் போட்டி அரசியலிலும் தொட ரும். நாங்கள் திரைத்துறையில் போட்டியாளர்களாக மட்டுமே இருந்தோம்; பொறாமையாளர்களாக இருந்ததில்லை. அது, அரசியலிலும் தொடரும்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்