தமிழர்கள் பயன்படுத்திய நானோ தொழில்நுட்பம்: கீழடியில் சான்றுகள்

தமிழர்கள் பயன்படுத்திய நானோ தொழில்நுட்பம்: கீழடியில் சான்றுகள்

2 mins read
c80b9911-078f-42ec-b14d-da5a1b52f6e7
கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதி. படம்: ஊடகம் -

கீழ­டி­யில் நடை­பெறும் அகழ்­வா­ராய்ச்­சி­யில் நானோ தொழில்­நுட்­பம் குறித்த குறிப்­பு­கள் காணப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பானை சுடு­வ­தில் தமி­ழர்­கள் நானோ தொழில்­நுட்­பத்­தின் கூறு­க­ளைப் பயன்­ப­டுத்தி இருப்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் கிடைத்­துள்­ளன.

கீழடி அகழாய்­வில் கிடைத்த பானை ஓட்டை ஆய்­வுக்கு உட்படுத்தி­ய­தில் இக்­கூற்று அறி­வி­யல் பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என ஆய்­வா­ளர்­கள் சுட்­டிக் காட்­டு­கின்­ற­னர்.

"சங்க காலத் தமி­ழர்­கள் இரும்பு உருக்­கு­வ­தி­லும் பானை சுடு­வ­தி­லும் மிகச் சிறந்­த­வர்­கள். பானை சுடும்­போது அதில் வெவ்­வேறு வண்­ணங்­க­ளைப் பூசு­வது வழக்­கம். அப்­ப­டிப் பூசும் வண்­ணங்­கள் சிதை­யா­ம­லும் மங்­கா­ம­லும் இருக்க வேண்­டு­மென்­றால் எவ்­வ­ளவு வெப்ப­நிலை வரை பானை­க­ளைச் சுட வேண்­டும் என்று அவர்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­கிறது.

"வண்­ணம் பூசப்­பட்ட பானை­கள் உயர் வெப்ப நிலை­யில் சுடப்­ப­டும்­போது கார்­பன் நானோ குழாய்­கள் உரு­வா­கி­யி­ருக்க வேண்­டும்.

"குறிப்­பிட்ட உயர் வெப்ப நிலை­யில் பானை சுடப்­பட்­டால் அதில் பூசப்­படும் வண்­ணப்­பூச்சு சிதை­யா­மல் இருக்­கும் என்ற பட்­ட­றிவு 2,400 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே தமி­ழர்­க­ளுக்கு இருந்­தி­ருக்­கிறது," என்­கி­றார்­கள் ஆராய்ச்­சி­யா­ளர்­கள்.

தற்­போது கார்­பன் நானோ குழாய்­கள் உரு­வாக்க மூன்று அல்­லது நான்கு வழி­மு­றை­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன.

அவற்றுள் மிக உயர் வெப்ப நிலை­யில் ஒரு­பொ­ருளை சூடாக்கு­வ­தன் மூலம் நானோ குழாய்­களை தமிழர்கள் உரு­வாக்கி இருப்­ப­தா­க ஆராய்ச்­சி­யா­ளர்­கள் பலரும் கரு­து­கின்­ற­னர்.

பல ஆண்­டு­க­ளுக்­குப் பின்­பும் கீழடி பானை ஓடு­களில் இருக்­கும் கருப்பு வண்­ணப்­பூச்சு சிதை­யா­மல் இருப்­ப­தற்கு அதன் உறு­தித்­தன்­மை­தான் கார­ணம் என்­றும் நானோ தொழில்­நுட்­பத்­தின் அடிப்­ப­டை­யில் அந்­தப் பானை­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தால்­தான் அவை உறு­தி­யாக உள்­ளன என்­றும் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.