8.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

8.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

1 mins read

திருச்சி: திருச்சி விமான நிலை­யத்­தில் ரூ.4.25 கோடி மதிப்­புள்ள 8.5 கிலோ கடத்­தல் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

இது­தொ­டர்­பாக ராம­நா­த­பு­ரம், இளை­யான்­கு­டி­யைச் சேர்ந்­த­வர்­கள் உள்­பட 10 பேரி­டம் அதி­கா­ரி­கள் விசா­ ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

துபா­யி­லி­ருந்து திருச்­சிக்கு வந்த இண்­டிகோ, ஏர் இந்­தியா விமா­னங்­களில் வந்த ஒரு பெண் உள்­ளிட்ட 10 பய­ணி­கள் தங்­கள் உடை­க­ளி­லும் உடை­மை­க­ளி­லும் தங்­கத்தை கடத்தி வந்­ததை அதி­கா­ரி­கள் கண்டுபிடித்­த­னர். விமானப் போக்குவரத்து குறைந்துள்ள போதும் தங்கக் கடத்தல் தொடர்கிறது. பயணிகள் போல் வந்த கடத்தல்காரர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.