உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தம்பதிகள் சத்தியப் பிரமாணம் 13 பெண் நீதிபதிகள் இருப்பதற்கு துணை அதிபர் பாராட்டு புயல் பாதிப்பை மதிப்பிட தமிழகம் வந்த மத்திய குழு

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தம்பதிகள் சத்தியப் பிரமாணம் 13 பெண் நீதிபதிகள் இருப்பதற்கு துணை அதிபர் பாராட்டு புயல் பாதிப்பை மதிப்பிட தமிழகம் வந்த மத்திய குழு

2 mins read
f5251f80-5a0c-4db9-a8d9-146854a4b7ed
-

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்றுக்கொள்ளும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

இவ்விழாவில், ஒரு சுவாரசியமான விஷயமாக கணவன் மனைவியான முரளி சங்கர் குப்புராஜும் தமிழ்ச்செல்வி டி வலயபாளையமும் (படம்) நீதிபதிகளாக சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் கணவன்-மனைவியாக ஒரேநாளில் தம்பதிகள் நீதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு, நீதிபதி விவேக் பூரி, நீதிபதி அர்ச்சனா பூரி ஆகியோர் கடந்த ஆண்டு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்களில் ஒரேநாளில் நீதிபதிகளாக பதவியேற்றனர்.

சென்னை: நாட்­டில் வேறு எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத அள­வில், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் 13 பெண் நீதி­ப­தி­கள் இருப்­ப­தற்கு துணை அதி­பர் வெங்­கையா நாயுடு பாராட்டுகளைத் தெரி­வித்­துள்­ளார்.

"சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் பெண் நீதி­ப­தி­க­ளின் எண்­ணிக்கை 13 ஆக உயர்ந்து இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது. சென்னை நீதி­மன்­றத்தைப் பொறுத்­த­மட்­டில் மொத்­தம் 63 நீதி­ப­தி­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இதில் 13 பேர் பெண்­கள் எனும்­போது அவர்க ளுக்கு 21% வாய்ப்பு வழங்­கப் பட்­டுள்­ளது.

"நாட்­டி­லேயே அதிக பெண் நீதி­ப­தி­கள் பணி­யாற்­றும் நீதிமன்­ற­மாக சென்னை உயர் நீதி­மன்­றம் உள்ளது. இது பெரு­மைக்­கும் பாராட்­டுக்­கும் உரி­யது. உச்ச நீதி­மன்­றத்­தில் உள்ள 33 நீதி­பதி­களில் இரு­வர் மட்­டுமே பெண்கள். இந்­தி­யா­வில் உள்ள 25 உயர் நீதிமன்­றங்­களில் 78 பெண் நீதி­பதி­கள் மட்­டுமே உள்­ள­னர்," என்றார்.

சென்னை: நிவா், புரெவி புயல்­களின் தாக்­கத்­தால் தமி­ழ­கத்­தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்டுள்­ளது. வீடு­கள், விளை­ப­யிர்­கள் சேதம் அடைந்­துள்­ளன.

இந்­தப் புயல் பாதிப்­பு­கள் குறித்து ஆய்வு செய்­வ­தற்­காக மத்­திய குழு ஒன்று நேற்று சென்னை வந்­தது. மத்­திய அர­சுத் துறை­க­ளைச் சோ்ந்த ஏழு அதி­கா­ரி­கள் இந்­தக் குழு­வில் இடம்­பெற்­றுள்­ளனா்.

இக்­குழுவினர் இரு பிரி­வு­க­ளா­கப் பிரிந்து புயல் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­களில் ஆய்­வுப் பணி­களை மேற்­கொள்ள உள்­ளனர்.

முதல் குழு இன்று ஞாயி­றன்று தென் சென்னை, செங்­கல்­பட்டு ஆகிய இடங்­க­ளி­லும் புதுச்­சேரி, கடலூா், விழுப்­பு­ரம் ஆகிய இடங்­களில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யும் ஆய்­வு­களை நடத்­த­வுள்­ளது.

இரண்­டா­ம் குழு, வட­சென்னை, திரு­வள்ளூா், காஞ்­சி­பு­ரம் மாவட்­டங்­களில் இன்­றும் வேலூா், திருப்­பத்தூா் மாவட்­டங்­களில் நாளையும் ஆய்­வு­களை நடத்தும்.