சென்னை: தமிழகக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு பட்டப்படிப்பைத் தொடர்ந்து வரும் மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
50% மாணவர்களுடன் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலா் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண்மை, பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம், பாலிெடக்னிக், உணவு மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதி யாண்டு கல்விையப் பயிலும் மாணவா்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்து வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
"கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளைத் திறக்கவோ, அந்தப் பகுதியில் வசிக்கும் மாணவா்களைக் கல்லூரிக்கு வரும்படி அழைக்கவோ கூடாது.
"கல்லூரி வளாகங்களில் முகக் கவசம், தனிநபா் இடைவெளி, கிருமிநாசினியைப் பயன்படுத்து வதை மாணவா்களும் ஆசிரி யா்களும் பின்பற்றவேண்டும்.
"அதேபோல், 50% மாணவா்களுடன் சுழற்சி முறையில் வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகளை நடத்தவேண்டும்.
"நோய்த்தொற்று அறிகுறி உள்ள வா்களைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது.
"கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இணைய வகுப்புகளையும் தொடர வேண்டும்.
"விடுதிகளில் ஓர் அறையில் ஒரு மாணவா் மட்டுமே தங்கியிருக்கவேண்டும். வளாகங்களைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்," எனக் கூறப்பட்டுள்ளது.

