தமிழகத்தில் சாத்தான் குளம் சம்பவம் போன்றே மற்றொரு கைதியும் மரணம் அடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து மூன்று குழந்தைகளுடன் கைதியின் மனைவி பிரபா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னையில் உள்ள அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம்.
கடந்த திங்களன்று எட்டு கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இவரை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் திடீரென நேற்று காலை இறந்துவிட்டதாக காவல்துறையினர் அவரது குடும்பத்திற்குத் தகவல் தந்தனர்.
மகாலிங்கத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துைறயினர் தனது கணவரை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் மகாலிங்கத்தின் மனைவி பிரபா குற்றம்சாட்டியுள்ளார்.
உயிரிழந்த மகாலிங்கம் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்றும் சிறுநீரக பாதிப்பு உடையவர் என்றும் சிறையில் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாததால் வாந்தி, வயிற்றுப் போக்கால் மயக்கமடைந்து இறந்துவிட்டதாகவும் மாஜிஸ்திரேட்டிடம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தனது கணவர் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் போலிசார் தாக்கியதில் அவர் இறந்துவிட்டதாகவும் பிரபா குற்றம்சாட்டி உள்ளார். உடல் கூர் ஆய்வுக்குப் பிறகே உயிரி ழப்புக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

