சித்ராவை தொந்தரவு செய்த அரசியல் பிரபலம்

சித்ராவை தொந்தரவு செய்த அரசியல் பிரபலம்

1 mins read
225cce57-136d-4256-83b9-7380d3e3ac88
-

சின்­னத்­திரை பிர­ப­லம் சித்ரா (படம்) நட்­சத்­திர விடுதி ஒன்­றில் தூக்­கிட்டு உயிரை மாய்த்­துக் கொண்ட சம்­ப­வம் தமி­ழ­கம் முழு­வ­தும் அதிர்வு அலை­களை ஏற்­ப­டுத்­தி­யது. தற்­கொலை என்­ற­போ­தி­லும் சித்­ரா­வின் சாவில் மர்­மம் நீடிக்­கிறது. அவர் தற்­கொலை செய்­ய­வில்லை என சித்­ரா­வின் தந்தை காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.

சித்ரா தற்­கொலை செய்­யும் முன் அவ­ரது கண­வர் ஹேமந்த் தின­மும் மது அருந்­தி­விட்டு தேவை­யின்றி சித்­ரா­வின் மேல் சந்­தே­கம் அடைந்து அவரை துன்­பு­றுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு பெரம்­ப­லூ­ரில் ஒரு கடைத் திறப்­பு­வி­ழா­வுக்குச் சென்­ற­போது அங்கு அறி­மு­க­மான அர­சி­யல் பிர­ப­லம் சித்­ரா­வின் கைபே­சிக்கு அன்­றா­டம் குறுஞ்­செய்தி அனுப்­பி­ய­தா­க­வும் வரும் புத்­தாண்டை தம்­மு­டன் கொண்­டாட வேண்­டும் என அவர் தக­வல் அனுப்பி தொந்­த­ரவு செய்­த­தா­க­வும் போலி­சார் சந்­தே­கிக்­கின்­ற­னர்.

அந்த சந்­தே­கத்தை உறு­தி­செய்­வ­து­போல சித்­ரா­வின் கைபேசி­ யிலிருந்த அழைப்பு விவ­ரங்­களும் வாட்ஸ்­அப் தக­வல்­களும் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் அர­சி­யல் முக்­கிய புள்­ளி­க­ளுக்­கும் மர­ணத்­தில் தொடர்பு இருப்­ப­தாக கூறப்­பட்­டது.

அழிக்­கப்­பட்ட விவ­ரங்­களை மீட்க இணை­யக் குற்ற விசா­ரணை போலி­சார் முயன்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், சித்ரா தற்­கொலை செய்துகொண்ட வழக்­கில் யார் தவறு செய்­தி­ருந்­தா­லும் அவர் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறி­யுள்­ளார்.