டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

2 mins read
bb84bad3-67f1-4c11-a5d5-4a2777462338
-

தஞ்­சா­வூர்: டெல்டா மாவட்­டங்­களில் கடந்த இரு நாட்­க­ளாக மீண்­டும் விடாது தொடர்ந்து கன­மழை பெய்­து­வ­ரு­கிறது. இத­னால், விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை ெவகு­வா­கப் பாதிக்­கப்­பட்டு அவர்கள் வீடுகளில் முடங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மக்­கள் வெளி­யில் ெசன்று வரு வதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் மீன், காய்­கறி, பழங்­கள் உள்­ளிட்ட விற் னையா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

சரி­யான வடி­கால் வச­தி­யின்றி வீட்­டைச் சுற்றி தேங்­கி­யுள்ள நீரால் பல மாவட்­டங்­க­ளி­லும் வசிக்­கும் மக்­கள் அவ­திப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இந்த மழை தொடர்ந்து பெய்­யும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்­ட­லத் தலை­வர் பாலச்­சந்­தி­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.

அவர் அளித்­துள்ள பேட்­டி­யில், "வட­கி­ழக்கு பரு­வ­மழை இந்த மாதக் கடைசி வரை நீடிக்­கும். பரு­வக்­காற்று குறை­வ­து­டன் அதன் ஈரப்­ப­த­மும் குறைந்­தால்­தான் மழைப் பொழிவு குறை­யத் துவங்­கும். தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் மழை தொடர்­வ­தற்கே வாய்ப்­பு­கள் அதி­கம் உள்­ளது.

"வளி­மண்­டல சுழற்­சி­யால் பல மாவட்­டங்­க­ளி­லும் கன­மழை பெய்து வரு­கிறது. நாகப்­பட்டினம், தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், கடலுார், விழுப்­பு­ரம், புதுக்­கோட்டை, சிவ­கங்கை உள்­ளிட்ட மாவட்­டங்­கள், புதுச்­சேரி­யில் சில இடங்­க­ளி­லும் கனமழை பெய்­யும். இம்­மா­தக் கடைசி வரை மழை தொடர வாய்ப்புள்­ளது," என்று பாலச்­சந்­தி­ரன் கூறி­யுள்­ளார்.

கடந்த இரு நாட்­க­ளாக நாகை, நாகூர், வேளாங்­கண்ணி, திருக் குவளை, கீழ்­வே­ளூர், திரு­ம­ரு­கல், திட்­டச்­சேரி உள்­ளிட்ட பகு­தி­களில் கன­மழை பெய்து வரு­கிறது.

தஞ்சை, நாகை, திரு­வா­ரூர் மாவட்­டங்­களில் புரெ­விப் புய­லால் பெய்த கன­ம­ழை­யால் வயல்­களில் தேங்­கிய மழை­நீரை வடி­ய­வைக்­கும் முயற்­சி­யில் விவ­சா­யி­கள் படாத பாடு­பட்­ட­னர். அதன்­பின்­னர், கடந்த சில நாட்­க­ளாக வெயில் அடித்­த­தால் நிம்­ம­தி அடைந்தனர்.

ஆனால், இப்­போது மீண்­டும் பெய்து வரும் தொடர்மழை­யால் விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் பெரும் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது.

இந்த தொடர்­மழை கார­ண­மாக தஞ்சை, நாகை, வேதா­ரண்­யம் பகு­தி­யைச் சேர்ந்த 20,000 மீன­வர்­கள் கடந்த இரு நாட்­க­ளாக கட­லுக்கு மீன்­பி­டிக்­கச் செல்லவில்லை.

தஞ்சை அருகே பட்­டுக்­கோட்டை யில் தரைப்­பா­லம் மூழ்­கும் அபா யத்­தில் உள்­ள­தால் அங்கு மீண்­டும் போக்­கு­வ­ரத்து பாதிக்­கும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் பத்துக்கும் மேற்­பட்ட கிராம மக்­கள் பாதிக்­கப்பட்டுள்ளனர்.

இதே­போல் வேதா­ரண்­யத்­தில் வாய்க்­கால்­, ஆறு­களில் தண்­ணீர் பெருக்­கெ­டுத்து ஓடுவதால் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்ளது.

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் பெய்த கன­மழை­யால் நீர்­நி­லை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன. பல இடங்­களில் தரைப்­பா­லத்­தின் மேல் உபரி­நீர் செல்­வ­தால் போக்­கு­வ­ரத்து துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பம்பை ஆற்­றிலும் மீண்­டும் வெள்­ளப்­பெருக்கு ஏற்­படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ேவதா ரண்யத்தில் ெதாடா் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.

அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக 2 அடி முதல் 3 அடி தண்ணீாில் மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது.

படம்: தமிழக ஊடகம்