திண்டிவனம்: துணை முதல்வர் பதவியுடன் தாங்கள் போட்டியிடுவதற்குத் தோதாக அதிக இடங்களையும் தரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பல கோரிக்கை களையும் வலியுறுத்தியதை அடுத்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்குச் சென்ற அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், திமுக, அதிமுக இல்லாத மூன்றாவது கூட்டணி தொடர்பாக பாமக யோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கெனவே இதுகுறித்து ரஜினி-அன்புமணிக்கு இடையே பேச்சுவார்த்தை துவக்கப்பட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் தங்களது கூட்டணி குறித்து ஜனவரி இறுதியில் முடிவு செய்ய பாமக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்ய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் ராமதாசை அதிமுகவின் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, துணை முதல்வர் பதவி உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அமைச்சர்களை ராமதாஸ் திருப்பி அனுப்பியதால் அதிமுக-பாமக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிக இடம் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
குறிப்பாக, பாஜக 60 தொகுதி கள், தேமுதிக 41 தொகுதிகள் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவுக்கு கொடுக்கும் அதே அளவிலான தொகுதிகளைத் தங்களுக்கும் தரும்படி கோரியுள்ளது பாமக.
அத்துடன், வடமாவட்டங்களில் எங்களுக்கு கிடைக்கும் வாக்குகளின் விழுக்காடும் அதிகம் என்பதால் எங்களுக்கு துணை முதல்வர் பதவியும் தரவேண்டும் என கேட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
வரும் 31ஆம் தேதி நடக்கவுள்ள பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறுமி பாலியல்
வன்கொடுமை:
இருவருக்கு
சாகும்வரை சிறை
கோவை: கோவையை அடுத்த காரமடையில் தனியார் பள்ளி யில் எல்கேஜி படித்து வந்த நான்கு வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாகன ஓட்டுநரும் அவரது உதவியாளரும் இயற்கையாக சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பள்ளி வேன் ஓட்டுநரான கோவில்பாளையம், சென்ராய புரத்தைச் சேர்ந்த கோவிந்த ராஜ் (37), காரமடையைச் சேர்ந்த மாரிமுத்து (50) ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் மயக்க ஊசி போட்டு சிறுமியை கொடுமை செய்தது தெரியவந்தது.

