புதுக்கோட்டை: கடந்த சில நாள்களாக இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்துள்ள 2,800 பேரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"இங்கிலாந்தில் இருந்து நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வந்துள்ள 2,800 பேரும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறையின் மூன்றடுக்கு கண் காணிப்பு வளையத்தில் உள்ளனர்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், வீரப் பட்டில் செய்தியாளர்களிடம் அமைச் சர் பேசியபோது, "தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவல் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. பொது மக்கள் புதுவகையான வீரியமிக்க கிருமியை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ள வேண்டாம்.
"இங்கிலாந்தில் இருந்து திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வந்துள்ளவர்களுக்கு கிருமித்தொற்றில்லை என்பதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
"அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்துள்ள ஏழு பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களை அணுக்க மாகக் கண்காணித்து வருவதாகவும் அம்மாவட்ட ஆட்சியரும் கூறியுள்ளார்," என்றார் விஜயபாஸ்கர்.
இதற்கிடையே, இக்கிருமியை தமிழகத்திற்குள் பரவவிடாமல் முறியடிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிய வீரியமிக்க கிருமி பரவாமல் தடுக்க மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்ட எல்லைகளும் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்கெனவே உள்ள தடுப்பு வழி முறைகளான முகக்கவசம் அணி வது, தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்றவற்றை கடைப்பிடித்தாலே கொரோனா மட்டுமின்றி, இதர கிருமி பாதிப்புகளில் இருந்தும் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம் என்று வழிகாட்டியுள்ளது தமிழக சுகாதாரத்துறை.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்துள்ள 2,800 பேரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் புதுவகையான வீரியமிக்க கிருமியை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ளவேண்டாம்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

