தமிழகத்தில் எல்லை கடக்கும் இணைய வதந்தி பிரசாரங்கள்

தமிழகத்தில் எல்லை கடக்கும் இணைய வதந்தி பிரசாரங்கள்

2 mins read

சுவரொட்டி, கூட்டங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளைப் போல் சட்டம் தேவை என குரல்

சென்னை: தமிழ்­நாட்­டில் சட்­ட­மன்றத் தேர்­தல் நெருங்கி வரு­கிறது. கொவிட்-19 கிருமி கார­ண­மாக தேர்­தல் பிர­சா­ரத்­தில் சமூக வலைத்­த­ளங்­க­ளின் பங்கு பெரி­தும் கூடி­வ­ரு­கிறது. பல்­வேறு கட்­சி­களும் தக­வல் தொழில்­நுட்பக் குழுக்­களை அமைத்து இணை­யப் பிர­சா­ரங்­களைத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், கட்­சி­க­ளின் சமூக வலைத்­த­ளங்­களில் அனா­ம­தேய முக­வ­ரி­களில் பதி­வு­கள் வரம்பு கடப்பதாகவும் அவற்­றில் பெரும்­பா­லா­னவை வதந்­தி­க­ளாக இருப்பதா­க­வும் கட்­சி­களும் மக்­களும் தெரி­விக்­கி­றார்­கள்.

இத­னால் மிரட்­டல், தேவை­யில்­லாத சச்­ச­ர­வு­கள் தலை­தூக்­கு­வ­தா­கக் குறிப்­பி­டும் அவர்­கள், சுவ­ரொட்­டி­கள், பதா­கை­கள், பொதுக் கூட்­டங்­க­ளுக்­குத் தேர்­தல் ஆணை­யம் கட்­டுப்­பா­டு­களை விதித்து இருப்­ப­தைப் போல இணை­யத் தேர்­தல் பிர­சா­ரத்­திற்­கும் கடு­மை­யான கட்டுப்­பா­டு­கள் தேவையென கூறுகிறார்கள்.

இணை­யத்­தில் ஒவ்­வொரு கட்­சி­யும் நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் பல்­வேறு பெயர்­களில் கணக்­கு­க­ளைத் தொடங்கி தங்­கள் அர­சி­யல் எதி­ரி­க­ளைக் கேலிக்­கூத்­தா­கச் சித்­திரிக்­கின்­றன.

கட்­சித் தலை­வர்­கள் எப்­போதோ பேசிய காணொ­ளி­களை வெட்­டி­யும் ஒட்­டி­யும் திருத்­தம் செய்­தும் பதி­வேற்றி வரம்பு மீறி அர­சி­யல் கட்­சி­கள் செயல்­ப­டு­கின்­றன.

இப்­ப­டிச் செய்­வ­தன் மூலம் ஒரு கட்­சி­யின் பெய­ரைக் கெடுக்­க­வும் நடு­நிலை வாக்­கா­ளர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­க­வும் முடி­யும் என்று கட்­சி­கள் நம்­பு­வ­தாக கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

"ஒன்­றை­யொன்று விமர்­சிக்­கும் போக்கு எல்லை கடந்­து­விட்­டது. சில நேரங்­களில் இவற்­றைச் சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை," என்று சமூக ஆர்­வ­லர்­களும் நடு­நிலை வாக்­கா­ளர்­களும் கவலை தெரி­விக்­கி­றார்­கள்.

"இந்­திய தேர்­தல் ஆணை­யம் பொதுத் தேர்­த­லுக்­குப் பல கட்­டுப்­பா­டு­களை அண்­மைய கால­மாக விதித்­துள்­ளது. வாகன கட்­டுப்­பாடு, பிர­சார நேரத்­திற்­கான கட்­டுப்­பாடு ஆகி­ய­வை­யும் அவற்­றில் அடங்­கும்.

"இதன் கார­ண­மாக நாளும் பொழு­தும் 24 மணி நேர­மும் திறந்­த­வெ­ளி­யா­கவே இருக்­கும் இணை­யத்­தில் பல்­வேறு அர­சி­யல் கட்சித் தொண்­டர்­களும் கண்­ட­படி கருத்து களைப் பதி­வேற்றி வர தொடங்கி இருக்­கி­றார்­கள்.

"இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்­டும். அர­சி­யல் நாக­ரிகம் காக்­கப்­ப­ட­வேண்­டும்," என்­றும் அவர்­கள் கோரு­கி­றார்­கள்.

"நடக்­க­வி­ருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­தல் கொவிட்-19 கார­ண­மாக அதி­கம் இணை­யத்­தைச் சார்ந்து இருக்­கும். இதை உணர்ந்­து ­அ­ர­சி­யல் கட்­சி­கள் செயல்­படுகின்றன.

"இத­னால் தேர்தல் ஆணை­யத்­தின் கட்­டுப்­பா­டு­கள் அவ­சி­யம்," என்று அவர்­கள் வலியுறுத்தினர்.