சிபிஐ: தங்கம் மாயமாகவில்லை; எடையைப் பதிந்தபோது தவறு

சிபிஐ: தங்கம் மாயமாகவில்லை; எடையைப் பதிந்தபோது தவறு

2 mins read

சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்­கம் மாய­மான விவ­கா­ரத்­தில் பர­ப­ரப்­பும் வியப்­பும் அதி­க­ரிக்­கும் வகை­யில் புதிய தக­வல் வெளி­யாகி இருக்­கிறது. தங்­கம் எது­வும் காணா­மல் போக­வில்லை என்­றும் அதை எடை போட்டு பதிந்­த­போது தவறு ஏற்­பட்­டு­விட்­ட­தா­க­வும் சிபிஐ இப்­போது தெரி­வித்­துள்­ளது.

சென்னை பாரி­மு­னை­யில் செயல்­படும் தனி­யார் தங்க ஏற்று­மதி, இறக்­கு­மதி நிறு­வ­னத்­தில் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­ய­போது அந்­தத் தனி­யார் நிறு­வனத்­தில் 400.47 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட தங்­கம், அதே நிறு­வ­னத்­தில் உள்ள பாது­காப்­புப் பெட்­ட­கத்­தில் பத்­தி­ர­மாக வைக்­கப்­பட்டு முத்­தி­ரை­யி­டப்­பட்டு பூட்­டப்­பட்­டது. அந்­தப் பெட்­டகத்­தின் சாவி­கள் சிபிஐ சிறப்பு நீதி மன்­றத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில், கடந்த பிப்­ர­வரி மாதம் குறிப்­பிட்ட பெட்­ட­கத்­தைத் திறந்து பார்த்­த­போது, அதில் வைக்­கப்­பட்டு இருந்த 400.47 கிலோ தங்­கத்­தில் 103.864 கிலோ தங்­கம் மாய­மா­கி­விட்­டது.

இது தொடர்­பாக சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டதை அடுத்து சிபிசிஐடி விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இதற்­கி­டை­யே, மாய­மான 103 கிலோ தங்­கம் பற்றி புது­டெல்லி சிபிஐ போலி­சும் தனி­யாக களத்­தில் இறங்கி விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது. இந்த விசாரணை இப்போது தொடர்கிறது.

தங்­கத்தை மொத்­த­மாக எடை போட்­ட­தா­க­வும் அந்த எடையை ஆவ­ணங்­களில் எழு­தும்­போது மாற்றி எழு­தி­விட்­ட­தா­க­வும் சிபிஐ விசாரணையில் இப்போது தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இருப்­பி­னும் 400.47 கிலோ தங்­கத்­தில் இப்­போது 296 கிலோ மட்­டுமே இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் எந்த எடை மாற்றி எழு­தப்­பட்­டது என்­பது குறித்து முழு­மை­யான தக­வல்­கள் இது­வரை வெளி­யா­க­வில்லை.

சிபிஐ விசா­ர­ணை­யில் இப்­படி எனில், சிபி­சி­ஐடி விசா­ர­ணை­யில் என்ன தெரி­ய­வ­ரும் என்­பது தெரி­யா­த­தால் பர­ப­ரப்­பும் வியப்­பு­களும் இதில் கூடி வருவ­தா­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

கூடு­தல் தக­வல்­கள் விரை­வில் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தமிழக போலிசும் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.