தமிழக சுற்றுலாத் தலங்களில் குவியும் பொதுமக்கள்

தமிழக சுற்றுலாத் தலங்களில் குவியும் பொதுமக்கள்

1 mins read
8ae7773a-f7cd-406b-924b-1312356ada10
மாமல்லபுரம். படம்: ஊடகம் -

கொரோனா கட்­டுப்­பா­டு­கள் அடுத்­த­டுத்து தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில் சுற்­று­லாத் தலங்­களில் கூடும் பொது­மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இத­னால் கொடைக்­கா­னல், மாமல்­ல­பு­ரம், குற்­றா­லம், ஏற்­காடு, ஊட்டி உள்­ளிட்ட பகு­தி­கள் களை­கட்டி வரு­கின்­றன.

சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால் சுற்­று­லாத் தலங்­களில் உள்ள தங்கு விடு­தி­களில் அறை முன்­ப­தி­வு­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் சிறு வியா­பா­ரி­கள் மகிழ்ச்சி அடைந்­தி­ருப்­ப­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த மார்ச் மாதம் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து சுற்­று­லாத் தலங்­கள் வெறிச்­சோ­டிப் போயின. இத­னால் தங்கு விடு­தி­கள் கடும் நஷ்­டத்தை சந்­தித்­தன.

கோடை கால விடு­மு­றை­யில் சுற்­று­லாத் தலங்­களில் அதி­க­மா­னோர் கூடு­வ­தால், சாலை­யோர வியா­பா­ரி­க­ளுக்கு நல்ல லாபம் கிடைக்­கும். ஆனால் இந்­தாண்டு கோடைக்­காலம் முழு­வ­தும் ஊர­டங்­கி­லேயே கழிந்­தது.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு விலக்­கப்­பட்டு பல்­வேறு தளர்­வு­களும் அடுத்­த­டுத்து அறி­விக்­கப்­ப­டு­வ­தால் ஊட்டி, கொடைக்­கா­னல், குற்­றா­லம் உள்­ளிட்ட பகு­தி­களில் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. சிறு கடை­கள், உண­வ­கங்­கள் வைத்­தி­ருப்­போ­ரும் தங்கு விடுதி உரி­மை­யா­ளர்­களும் 9 மாதங்­க­ளுக்­குப் பிறகு உற்­சா­க­ம­டைந்­துள்­ள­னர்.

கிறிஸ்­மஸ் பண்­டி­கை­யை­யொட்டி தொடர்ந்து 3 நாட்­கள் விடு­முறை என்­ப­தால் மாமல்­ல­பு­ரத்­தில் சுற்­று­லாப் பய­ணி­க­ளைக் காண முடிந்­தது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் மட்­டும் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பய­ணி­கள் மாமல்­ல­பு­ரம் வந்­தி­ருப்­ப­தாக சுற்­றுலா வழி­காட்­டி­கள் தெரி­வித்­த­னர்.