ராமநாதபுரம்: காலஞ்சென்ற காற்பந்தாட்ட வீரர் மரடோனாவுக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ரங்கநாதன் ஆறடி உயரத்தில் கேக் சிலை செய்துள்ளார்.
இவருக்குச் சொந்தமான பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்த கேக் சிலை கடை வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
"இதற்கு முன்பு இளையராஜா, அப்துல்கலாம், பாரதியார் ஆகியோருக்கும் இதே போல் கிறிஸ்துமஸ் சமயத்தில் சிலை வைத்துள்ளோம். கிரிக்கெட்டிற்கு ஒரு டெண்டுல்கர், ஓட்டப்போட்டிக்கு ஒரு உசேன் போல்ட், குத்துச்சண்டைக்கு ஒரு மைக் டைசன் என்பது போல் காற்பந்தாட்டத்திற்கு மரடோனா என்பார்கள். எனவே அவருக்கு மரியாதை செய்யும் வகையில் சிலை வைத்துள்ளோம்," என்கிறார் சதீஷ் ரங்கநாதன்.

