தமி­ழ­கத்­தில் 6 மாவட்டங்களில் மட்டுமே கிருமித்தொற்றால் உயிரிழப்பு

தமி­ழ­கத்­தில் 6 மாவட்டங்களில் மட்டுமே கிருமித்தொற்றால் உயிரிழப்பு

1 mins read
dca14e2f-84f3-451b-af50-aec0cca6e4b9
சென்னையில் பெண்மணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது சோதிக்கப்படுகிறது. படம்: ஊடகம் -

தமி­ழ­கத்­தில் ஆறு மாவட்­டங்­களில் மட்­டுமே கிருமித்தொற்று பாதிப்பால் உயி­ரி­ழப்பு பதி­வாகி உள்­ளது.

பெரம்­ப­லூர் மாவட்டம் மீண்­டும் கொரோனா இல்­லாத மாவட்­ட­மாக மாறி­யது. 13 மாவட்­டங்­களில் ஒற்றை இலக்­கத்­தில் இந்த கிருமி பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் 8,867 பேர் கொரோ­னா­ கிருமிப் பரவலுக்கு சிகிச்சை பெற்று வரு­வ­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்தில் புதி­தாக மேலும் 1,005 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதி யானது. இத­னால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்­த எண்ணிக்கை 815,175 பேராக அதி­க­ரித்­துள்­ளது.

அத்துடன், கொரோனா பாதிப்­பிற்கு சிகிச்சை பெற்று வந்த 1,074 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். இது­வரை குண­மடைந்­தோர் எண்­ணிக்கையும் 794,228 ஆக­ உயர்ந்துள்­ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றால் 11 பேர் உயி­ரி­ழந்தனர். ­மொத்­தம் 12,080 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துைற தகவல் வெளியிட்டுள்ளது.