ஏழு வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கின் தொடர்பில் குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனையை வழங்கி புதுக்ேகாட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார்.
பலரும் அவரைத் தேடி வந்த நிலையில், சிறுமி அங்குள்ள குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றது உறுதியானது.
குற்றவாளியைத் தேடி வந்த போலிசாரின் பிடியில் பூக்கடையில் வேலை செய்யும் ராஜா, 27, என்பவர் சிக்கினார்.
போலிசாரின் விசாரணையில், சிறுமியைக் கடத்திச் சென்று, கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ராஜாவை சிறையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசா ரணை நடந்து வந்தது.
இந்தச் சம்பவம் நடந்த ஆறு மாதத்துக்குள் குற்றவாளி சாமுவேல் என்ற ராஜாவுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும் ஓா் ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி சத்யா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்கும் சிறுமியைக் கொன்ற தற்கும் இரண்டு மரண தண்டனை கள் விதிக்கப்பட்டன.
அத்துடன், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னையும் விதிக்கப்பட்டது.

