சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தனது உடல்நலனைக் காரணம் கூறி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இதைக்கேட்டு அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோரி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின்முன் ரசிகர்கள் சிலர் குந்தியிருப்புப் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் எரிச்சலடைந்த ரசிகர்கள் ரஜினியின் சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர். படம்: ஊடகம்
சென்னை: ரஜினி "இனி கட்சியும் இல்லை, அரசியலும் இல்லை," என்ற வலி மிகுந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இத்தருணத்தை பல கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள களமிறங்கி உள்ளனர்.
ரஜினியின் ஆதரவு தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறி வித்துள்ள ரஜினிகாந்த், அதிமுக விற்கு ஆதரவளிப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியபோது, "ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இம்முடிவை அறிவித்துள்ளார். எனவே, அதிமுக சார்பில் எந்தவித கருத்தும் சொல்ல முடியாது. அவர் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து, மக்களுக்காக தொண்டாற்றவேண்டும்.
"ரஜினிகாந்த் ஒருபோதும் திமுக விற்கு ஆதரவு தரமாட்டார். எதிர்காலத்தில் யாருக்கேனும் அவர் ஆதரவளிக்க விரும்பினால், அது மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்காகத்தான் இருக்கும். 'சிஸ் டம்' சரியில்லை எனக் கூறியது அதிமுகவை அவர் குறை கூறியதாக அர்த்தமாகாது," என்றார்.
கோவில்பட்டியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுைகயில், "வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ரஜினிகாந்த் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வோம்.
"யாருக்கு குரல் கொடுக்கலாம் என்பது அவரது விருப்பம். இந்த விஷயத்தில் அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியே," என்றார்.
இதையடுத்து, "ரஜினியின் நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். விரைவில் ரஜினியைச் சந்தித்துப் பேசுவேன். நண்பர் என்பதால் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கேட்பேன்.
"நான், என் ரஜினி என்று சொல்லிக் கொண்டிருந்தவன். அதனால் எனக்கு அந்த உரிமை உள்ளது. கோபப்படமாட்டார் என நினைக்கி றேன்," என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிைடயே, ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துள்ளதால், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இதனால், சில இடங்களில் இத்தனை நாள் பட்ட சிரமம் எல்லாம் வீணாகிவிட்டதே என்ற வேதனையுடன் ரசிகர்கள் சிலர் சுவரொட்டிகளை கிழித்து எறிந்துள்ளனர்.
சோதிடர் ஷெல்வி தொழிலை விடுவாரா என கேள்வி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சியைத் தொடங்குவார். அப்படித் தொடங்காவிடில் எனது சோதிடர் தொழிலையே விட்டு விடுகிறேன் என பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக விளங்கும் சோதிடர் ஷெல்வி அண்மையில் பேட்டி ஒன்றில் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்றும் தான் தொடங்கயிருந்த அரசியல் ஆட்டத்தை இத்துடன் முடித்துக் ெகாள்வதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, சோதிடர் ஷெல்வி தனது தொழிலை விட்டுச் செல்வாரா? மாட்டாரா? என சமூக வலைத்தளங்களில் வலைவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அத்துடன், சோதிடத் தொழிலை விட்டு விடுவதாக ஷெல்வி கூறிய காணொளியை யும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழருவி மணியன்: சாகும் வரை அரசியல் இல்லை
சென்னை: தமிழகத்தில் ரஜினி காந்தின் அரசியல் வருகையால் ஒரு பெரும் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்துக் கொண்டி ருந்த தமிழருவி மணியனுக்கு தற்போது பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் முடிவைத் தொடர்ந்து இறப்பு தன்னைத் தழுவும் வரை தானும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
"மாணிக்கத்திற்கும் கூழாங் கல்லுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றுமில்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போன்றவை அரசியல் களத்தில் இருந்து விலகி நிற்பதே விவேக மானது. திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய்வருகிறேன் என்றார். நான் போகிறேன், வரமாட்டேன்," எனக் கூறியுள்ளார் மணியன்.

