தருமபுரி மாவட்டம், தொப்பூரில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். லாரியில் ஏற்றி வந்த 14 எருமைகளும் உயிரிழந்தன.
எருமைகளை ஏற்றி வந்த லாரி ஒரு கடையின் உள்ளே நுழைந்து அங்கிருந்த வீட்டின் சுவரை இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேசன் (30), அவரது மனைவி தீபா (25), இவர்களது மகள்கள் வைஷ்ணவி (5) ராதிகா (4), தனுஸ்ரீ (3) ஆகியோரும் லாரியில் வந்தவர்கள் உள்பட 11 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் லாரியில் இருந்த 14 எருமைகள் உயிரிழந்தன.
தொப்பூர் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.