லாரிகள் மோதிய விபத்தில் 11 பேர் காயம், 14 எருமைகள் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். லாரியில் ஏற்றி வந்த 14 எருமைகளும் உயிரிழந்தன.

எருமைகளை ஏற்றி வந்த லாரி ஒரு கடையின் உள்ளே நுழைந்து அங்கிருந்த வீட்டின் சுவரை இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேசன் (30), அவரது மனைவி தீபா (25), இவர்களது மகள்கள் வைஷ்ணவி (5) ராதிகா (4), தனுஸ்ரீ (3) ஆகியோரும் லாரியில் வந்தவர்கள் உள்பட 11 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் லாரியில் இருந்த 14 எருமைகள் உயிரிழந்தன.

தொப்பூர் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!