தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 17 மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
"இந்த தடுப்பூசி ஒத்திகையில் எவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட மாட்டாது. இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசிகளைப் போடுவதற்கு நேரம் போதுமானதாக இருக்குமா என்பது பார்க்கப்படும்.
"அதைத்தொடா்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களை எங்கு அமரவைப்பது, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது குறித்து ஒத்திகை பார்க்கப்படும்," என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தடுப்பூசிக்கான ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த தடுப்பூசிகளைப் போடும் பணிகளுக்காகத் தமிழகம் முழுவதும் 47,200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
"அத்துடன், 21,170 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.
இதற்கிடையே, மாநிலத்தில் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ள தாகவும் இதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு முதற்கட்டமாகவும் காவல்துறை, ராணுவம், செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் 50 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு, இதயம், சிறுநீரகப் பாதிப்புடையவர்களுக்கு மூன்றாம் கட்டமாகவும் 1.60 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

