முன்களப் பணியாளருக்குப் பூமழை பொழிந்து நன்றி

முன்களப் பணியாளருக்குப் பூமழை பொழிந்து நன்றி

1 mins read
b2207ff7-3ed4-45f6-aada-6bae80f689c3
இஎஸ்ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளுக்கு உயரே பறந்து ஹெலிகாப்டர்கள் முன்களப் பணியாளர்களுக்குப் பூமழை பொழிந்து நன்றி கூறின. படம்: தமிழக ஊடகம் -

கோவை: இளம் இந்­தி­யர்­கள் (Young Indians) என்ற அமைப்பு ஆண்­டு­தோ­றும் 'கோயம்­புத்­தூர் விழா' என்ற ஒரு விழாவை நடத்தி வரு­கிறது. 13வது ஆண்­டாக இந்த ஆண்­டு­ இந்த விழா ஜன­வரி 2 முதல் ஜன­வரி 10 வரை நடக்­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக பல நிகழ்ச்­சி­களும் இணை­யம் வழி நடத்­தப்­ப­டு­கின்­றன. என்­றா­லும் மெது­வோட்­டம் போன்ற நிகழ்ச்­சி­கள் நேர­டி­யாக இடம்­பெ­று­கின்­றன. முதல் நாளான சனிக்­கிழமை கொவிட்-19 முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு நன்றி கூறும் வகை­யில் ஹெலி­காப்­டர்­கள் அவர்­களை இல­வ­ச­மாக ஏற்­றிச் சென்­றன.

கோயம்­புத்­தூ­ரில் இருக்­கும் இரண்டு முக்­கி­ய­மான மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு உயரே ஹெலி­காப்­டர்­கள் பறந்து பூமழை பொழிந்து முன்­க­ளப் பணி­யா­ளர்­களுக்கு நன்றி தெரி­வித்­தன.

கோவையைப் போற்றி கொண்­டா­டும் வகை­யில் ஆண்டு ­தோறும் இந்த விழா நடக்­கிறது. கொவிட்-19 கிரு­மியை கோயம்­புத்­தூர் வெற்­றி­க­ர­மாக வீழ்த்தி இருக்­கிறது என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.