தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடி; தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் பரப்ப புதிய பயிலகம் அமைத்த டெல்லி அரசு

தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடி; தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் பரப்ப புதிய பயிலகம் அமைத்த டெல்லி அரசு

2 mins read
55e089d3-0c84-4be0-ae4d-a146f2746cef
-

தமிழ்­மொ­ழி­யை­யும் தமிழ்க் கலா­சா­ரத்­தை­யும் பரப்­பு­வ­தற்­காக டெல்லி அர­சாங்­கம் புதிய பயி­ல­கம் ஒன்றை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது. யூனி­யன் பிர­தே­ச­மான டெல்­லி­யில் முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தலை­மை­யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்­சி­யில் இருக்­கிறது. அதன் கலை, கலா­சார, மொழி அமைச்சு, தமிழ்­மொ­ழி­யை­யும் கலா­சா­ரத்­தை­யும் பரப்ப பயி­ல­கம் ஒன்றை அமைத்­துள்­ளது. அப்­பு­திய பயி­ல­கத்­திற்கு விரை­வில் அலு­வ­லக இடம் ஒதுக்­கப்­படும் என்­றும் தேவை­யான அனைத்து உள்­கட்­ட­மைப்பு வச­தி­களும் ஏற்­படுத்­தித் தரப்­படும் என்­றும் டெல்லி அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் ஓர் அறிக்கை மூலம் தெரி­வித்­தது. டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா பயி­ல­கத்­தின் தலை­வ­ராக இருப்­பார். முன்­னாள் மாந­க­ராட்சி உறுப்­பி­ன­ரும் டெல்லி தமிழ்ச் சங்­கத்­தின் உறுப்­பி­ன­ரு­மான என்.ராஜா பயி­ல­கத்­தின் துணைத் தலை­வ­ராக அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இது குறித்­துக் கருத்­து­ரைத்த திரு ராஜா, "டெல்­லி­யில் தமி­ழுக்­குப் பயி­ல­கம் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தில் மகிழ்ச்சி. அதில் நானும் ஓர் அங்­க­மாக இருக்­கப்­போ­வ­தைப் பெரும் கௌர­வ­மா­கக் கரு­து­கிறேன். இந்­திய வர­லாற்­றி­லும் டெல்­லி­யி­லும் தமிழ்­மொ­ழி­யும் கலா­சா­ர­மும் நீண்ட பாரம்­ப­ரி­யத்­தைக் கொண்­டுள்­ளது," என்றார்.

"கலா­சா­ரச் செழு­மை­மிக்க நக­ரம் டெல்லி. நாட்­டின் எல்­லாப் பகு­தி­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள் இங்கு வாழ்­கின்­ற­னர், வேலை செய்­கின்­ற­னர். இந்­தப் பன்­மு­கத்­தன்­மை­தான் டெல்­லியை உயிர்ப்­பு­டன் வைத்­துள்­ளது. தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ஏரா­ள­மான மக்­கள் இங்கு இருக்கின்றனர். தங்­கள் சொந்த மாநி­லத்­தின் கலை, கலா­சா­ரத்தை அனுபவிக்க அவர்­க­ளுக்கு ஒரு தளம் அமைத்­துத் தர விரும்­பு­கிறோம்," என்று திரு சிசோ­டியா கூறியுள்ளார்.

தமிழ்­மொ­ழி­யை­யும் கலாசா­ரத்­தை­யும் பரப்­பு­வ­தில் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­ய­வர்­க­ளைப் பாராட்­டும் வித­மாக பல விரு­து­களை வழங்­க­வும் டெல்லி கலை, கலா­சார, மொழி அமைச்சு முடி­வு­செய்­து இருக்கிறது.=அத்­து­டன், அப்­ப­யி­ல­கம் வாயி­லாக தமிழ்­மொ­ழிப் பாடப்­ப­ரி­வு­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. மேலும், தமி­ழக மக்­க­ளுக்­காக கலா­சார விழாக்­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­படும் என அந்த அறிக்கையில் குறிப்­பிடப்பட்டுள்ளது.

.