மு.க. அழகிரி: ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம்

மதுரை: எனது தம்பி ஸ்டா­லின் ஒரு­போ­தும் முதல்­வ­ராக முடி­யாது என மது­ரை­யில் தனது ஆத­ரவா ளர்­கள் மத்­தி­யில் பேசிய முன்­னாள் மத்­திய அமைச்­சர் மு.க.அழ­கிரி திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"வருங்­கால முதல்­வரே என்று எத்­தனை கோடி சுவ­ரொட்­டி­களை ஒட்­டி­னா­லும், ஸ்டா­லின் ஒரு­நா­ளும் முதல்­வ­ராக முடி­யாது. அது நடக்­காது. அதை நானும் எனது ஆத­ர­வா­ளர்­களும் நடக்­க­விட மாட்டோம்," என்று அவர் மேலும் கூறி­னார்.

நடிகர் ரஜி­னி­யின் புதிய கட்சி குறித்த ஆர்­வ­மும் எதிர்­பார்ப்­பும் மக்­கள் மத்­தி­யில் துவங்­கிய வேகத்­தி­லேயே அடங்கிவிட்­டது.

இந்­நி­லை­யில், அடுத்­த­கட்ட பர­ப­ரப்­பாக கடந்த ஆறு ஆண்டு களாகத் திமு­க­வில் இருந்து நீக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கும் கரு­ணா­நி­தி­யின் மூத்த மக­னான மு.க.அழ­கிரி தனது அர­சி­யல் ஆட்­டத்­தைத் தொடங்கி இருக்­கி­றார்.

இதை­ய­டுத்து, அவ­ரால் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சம் திமு­க­வில் நிலவி வரு­கிறது.

இத்தருணத்தில் அழ­கி­ரியை எப்­ப­டி­யா­வது பாஜ­க­வில் இணைத்து விட­வேண்­டும் என தமிழக பாஜக வும் தீவி­ரம் காட்டி வரு­கிறது.

இந்­நி­லை­யில், மதுரை மாந­கர் பாண்­டி­கோ­வி­லில் உள்ள துவா­ரகா பேல­சில் மு.க.அழ­கிரி தனது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் நேற்று முன்­தி­னம் மாலை ஆலோ­சனை நடத்­தி­னார்.

அதன்­பின்­னர் பேசிய அழ­கிரி, "இக்­கூட்­டம் துரோ­கி­கள், சதி­கா­ரர்­கள் வீழ்ச்­சிக்கான முதல்­படி.

"இப்­போ­தும் நான் உங்­களில் ஒரு­வன். மதுரை மாந­கர் எம்­ஜி­ஆரின் கோட்­டை­யாக இருந்­தது. அதை நான் திமு­க­வின் கோட்­டை­யாக மாற்­றி­னேன். நான் என்­றால் நீங்­களும் அதில் அடக்­கம்.

"கரு­ணா­நி­திக்குப் பிறகு நீதான் எல்­லாமே என்று ஸ்டா­லி­னி­டம் கூறி­னேன். ஸ்டா­லின் ஏன் எனக்கு துரோ­கம் செய்­தார் என்று தெரி­ய­வில்லை. ஸ்டா­லி­னுக்கு துணை முதல்­வர் பத­வியை என்­னி­டம் கேட்­டுத்­தான் கரு­ணா­நிதி அளித்­தார்.

"ஆனால், கரு­ணா­நி­திக்­கும் பொதுச் செய­லா­ளர் அன்­ப­ழ­க­னுக்­கும் தெரியாமல் சில துரோ­கி­கள் என்னை கட்­சி­யில் இருந்து நீக்­கி­விட்டனர்," என்­று குற்­றம்­சாட்­டிய மு.க.அழ­கிரி, "எனது முடிவை விரை­வில் அறி­விப்­பேன். நான் என்ன முடி­வெ­டுத்­தா­லும் அதனை நீங்­கள் ஏற்­றுக்­கொள்ளவேண்­டும். எதை­யும் சந்­திக்­கத் தயா­ராக இருங்­கள்," என்று கூறினார்.

இதற்கிடையே, "ஸ்டாலின் என்றைக்கும் முதல்வர் ஆகமுடியாது என அவரது அண்ணனே சொல்லி விட்டார். பொய் புரட்டுடன் முதல் வர் நாற்காலியைப் பிடித்துவிட ஸ்டாலின் நினைக்கிறார்," என்றார் அமைச்சர் எஸ்பி வேலுமணி.

ஸ்டாலின் முதல்வராக முடியாது, அது நிச்சயம் நடக்காது. என் ஆதரவாளர்கள் அப்படி நடக்க விடமாட்டார்கள். கருணாநிதியின் பெயரை நினைவுகூரும் வகையில் உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!