மதுரை: எனது தம்பி ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என மதுரையில் தனது ஆதரவா ளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"வருங்கால முதல்வரே என்று எத்தனை கோடி சுவரொட்டிகளை ஒட்டினாலும், ஸ்டாலின் ஒருநாளும் முதல்வராக முடியாது. அது நடக்காது. அதை நானும் எனது ஆதரவாளர்களும் நடக்கவிட மாட்டோம்," என்று அவர் மேலும் கூறினார்.
நடிகர் ரஜினியின் புதிய கட்சி குறித்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் துவங்கிய வேகத்திலேயே அடங்கிவிட்டது.
இந்நிலையில், அடுத்தகட்ட பரபரப்பாக கடந்த ஆறு ஆண்டு களாகத் திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி தனது அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்.
இதையடுத்து, அவரால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் திமுகவில் நிலவி வருகிறது.
இத்தருணத்தில் அழகிரியை எப்படியாவது பாஜகவில் இணைத்து விடவேண்டும் என தமிழக பாஜக வும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மதுரை மாநகர் பாண்டிகோவிலில் உள்ள துவாரகா பேலசில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் மாலை ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் பேசிய அழகிரி, "இக்கூட்டம் துரோகிகள், சதிகாரர்கள் வீழ்ச்சிக்கான முதல்படி.
"இப்போதும் நான் உங்களில் ஒருவன். மதுரை மாநகர் எம்ஜிஆரின் கோட்டையாக இருந்தது. அதை நான் திமுகவின் கோட்டையாக மாற்றினேன். நான் என்றால் நீங்களும் அதில் அடக்கம்.
"கருணாநிதிக்குப் பிறகு நீதான் எல்லாமே என்று ஸ்டாலினிடம் கூறினேன். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார்.
"ஆனால், கருணாநிதிக்கும் பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமல் சில துரோகிகள் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்," என்று குற்றம்சாட்டிய மு.க.அழகிரி, "எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். நான் என்ன முடிவெடுத்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள்," என்று கூறினார்.
இதற்கிடையே, "ஸ்டாலின் என்றைக்கும் முதல்வர் ஆகமுடியாது என அவரது அண்ணனே சொல்லி விட்டார். பொய் புரட்டுடன் முதல் வர் நாற்காலியைப் பிடித்துவிட ஸ்டாலின் நினைக்கிறார்," என்றார் அமைச்சர் எஸ்பி வேலுமணி.
ஸ்டாலின் முதல்வராக முடியாது, அது நிச்சயம் நடக்காது. என் ஆதரவாளர்கள் அப்படி நடக்க விடமாட்டார்கள். கருணாநிதியின் பெயரை நினைவுகூரும் வகையில் உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி