சேலம்: சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் வழங்குவதே எங்கள் லட்சியம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்," என்று பேசியுள்ளார்.
கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று செவ்வாய்க்கிழமை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அதன்பிறகு அவரது பிரசாரம் நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் தொடர்ந்தது.
தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத் துறைகளை அரசே ஏற்று நடத்தும் என்றும் அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசிய லுக்கு வந்திருக்கமாட்டேன் என்றும் கூறினார்.
ஏற்கெனவே இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலை யில், தற்போது பெண்களுக்கு சம உரிமை சம ஊதியம் வழங்குவதே தங்களது லட்சியம் என்று பேசி யுள்ளார்.
"சேலம், அழகாபுரம் பகுதியில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தைப் பாா்க்கும்போது தமிழகம் மாற்றத் துக்குத் தயாராகிவிட்டது தெரி கிறது. மக்கள் நீதி மய்யம் நோ்மை யான ஆட்சியைத் தரும்," என்றாா்.
சேலம் அழகாபுரம் பகுதியில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் திறந்தவெளி காரில் நின்று மக்களுடன் பேசினார். படம்: ஊடகம்

