கோவில் வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

கோவில் வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

1 mins read
d0551e9b-cb72-4dcf-99f4-9ea5c5f0701f
கைதான இவர்கள் இருவரையும் தூக்கிலிட வேண்டுமென மக்கள் ஆவேச முழக்கமிட்டனர். படம்: தமிழக ஊடகம் -

நாகை மாவட்­டம் நாகை தோப்பு அருகே சந்­திரா, 40, (கற்­ப­னைப் பெயர்) இவ­ருக்கு இரு பெண் குழந்­தை­கள் உள்­ள­னர்.

இதை­ய­டுத்து கையாள், சித்­தாள் உள்­ளிட்ட கிடைக்­கும் கூலி வேலை பார்த்து பிள்­ளை­களை வளர்த்து வரு­கி­றார் சந்­திரா. இரவு நேரங்­களில் மகள்­க­ளு­டன் அரு­கி­லுள்ள தனது சகோ­தரி வீட்­டுக்கு சென்று தூங்­கு­வது வழக்­கம்.

வியா­ழக்­கி­ழமை இரவு சகோ­தரி வீட்­டுக்கு தனி­யாக நடந்து சென்று கொண்­டி­ருந்­தார். அப்­போது அதே பகு­தி­யைச் சேர்ந்த அருண்­ராஜ், 25, ஆனந்த், 26, ஆகி­யோர் சந்­தி­ராவை பின்­தொ­டர்ந்து சென்­ற­னர்.

சிறிது நேரத்­தில் சந்­தி­ரா­வின் வாயை துணி­யால் பொத்தி சர­மா­ரி­யாக தாக்கி அங்­குள்ள கோவில் வளா­கத்­துக்கு வலுக்­கட்­டா­ய­மாக தூக்­கிச் சென்­ற­னர். இரவு நேர­மா­ன­தால் ஆள் நட­மாட்­டம் இல்லாததைப் பயன்­

ப­டுத்­திய இரு­வ­ரும் சந்­தி­ராவை கோவில் முன்பு கூட்டு பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­னர். இதில் சந்­திரா மயங்கி விழுந்­தார். அவர்­கள் இரு­வ­ரும் இரவு 11 மணி முதல் அதி­காலை 3 மணி வரை கூட்டு பாலி­யல் வன்­கொ­டு­மை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

காலை­யில் அக்­கம்­பக்­கத்­தி­னர் சந்­தி­ராவை நாகை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். அவர் தெரி­வித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் அருண்­ரா­ஜும் ஆனந்­தும் கைது செய்­யப்­பட்­ட­னர். இச்­சம்­பவத்­தைத் தொடர்ந்து நாகை தோப்பு பகுதி முழு­வ­தும் போலிஸ் குவிக்­கப்­பட்­டது. இரு­வ­ரை­யும் தூக்­கி­லிட வேண்­டும் என அப்­ப­குதி மக்­கள் ஆர்ப்­பாட்­டம் முழக்­க­மிட்­ட­னர்.