'அரசியலுக்கு வாங்க தலைவா': மன்றாடிய நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள்

'அரசியலுக்கு வாங்க தலைவா': மன்றாடிய நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள்

1 mins read
226a6309-30f2-44f9-b0a2-26b84174dd5e
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். படம்: இந்திய ஊடகம் -

தமி­ழகத் சட்­ட­மன்ற தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் நடி­கர் ரஜி­னி­காந்த் கட்சி தொடங்­கு­வார் என வழி­மேல் விழி­வைத்­துக் காத்­துக்­கொண்­டி­ருந்த அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு ஏமாற்­றம்­தான் மிஞ்­சி­யது.

அர­சி­ய­லுக்கு வரு­வது உறுதி என சூளு­ரைத்­தி­ருந்த ரஜினி, தமக்கு ஏற்­பட்ட உடல்­ந­லக் குறை­வைக் கார­ணம் காட்டி அண்­மை­யில் அர­சி­ய­லுக்கு முழுக்கு போட்­டார். இது அவ­ரது ரசி­கர்­க­ளுக்­குப் பேர­திர்ச்­சி­யைத் தந்­தது.

தாம் எடுத்­துள்ள இந்த முடிவு தமது ரசி­கர்­க­ளுக்கு பெருத்த ஏமாற்­றத்­தைத் தரும் என்று தமக்­குத் தெரி­யும் என்று கூறிய ரஜி­னி­காந்த், அவர்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டார்.

தமது முடிவை ஏற்­றுக்­கொள்­ளும்­படி அவர் ரசி­கர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில் ரஜி­னி­காந்தை அர­சி­ய­லுக்கு வர வலி­யு­றுத்தி, சென்னை வள்­ளு­வர்­கோட்­டம் அருகே நேற்று அவ­ரது ரசி­கர்­கள் சார்­பில் அற­வழி ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. அதில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் பங்­கேற்­ற­னர்.

தமி­ழ­கத்­தைக் காக்க ரஜி­னி­காந்த் அர­சி­ய­லுக்கு வர வேண்­டும் என்று அவ­ரது ரசி­கர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து பல ரஜினி ரசி­கர்­கள் சென்னை வள்­ளு­வர்­கோட்­டத்­தில் கூடி­ய­தாக தமி­ழக ஊட­கம் தெரி­வித்­தது.

இத­னைத்­தொ­டர்ந்து, சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் இது­தொ­டர்­பான செய்­தி­கள் வலம் வந்­தன. தேர்­த­லுக்கு ஒரு மாதம் முன்பு கட்சி தொடங்­கி­னா­லும் ரஜி­னி­காந்த் தமி­ழக முதல்­வ­ரா­வது உறுதி என்று ரசி­கர்­கள் கூறி­னர்.

குறிப்புச் சொற்கள்