விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் போராட்டம்

2 mins read
85ee2c47-d641-420a-8173-256876d5e697
டெல்லி போராட்டத் தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் சாலை யிலேயே கூடாரம் அமைத்து, சமைத்து, உண்டு, உறங்கி வருகின்றனர். போராட்டத்தின் போது கிடைத்த நேரத்தில் உணவு உண்ணும் விவசாயிகள். கோப்புப்படம்: ஊடகம் -

வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சா­யி­கள் போராடி வரும் நிலை­யில், காங்­கி­ரஸ் கட்சி ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­யுள்­ளது. எதிர்­வரும் 15ஆம் தேதி விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக நாடு தழு­விய போராட்­டம் நடை­பெ­றும் என அக்­கட்சி அறி­வித்­துள்­ளது.

டெல்­லி­யில் கடந்த 40 நாள்­க­ளுக்­கும் மேலாக விவ­சா­யி­க­ளின் போராட்­டம் நீடித்து வரு­கிறது. மத்­திய அர­சு­டன் பல­முறை பேச்சு நடத்­தி­யும் அவர்­க­ளின் கோரிக்­கை­கள் இது­வரை ஏற்­கப்­ப­ட­வில்லை.

புதிய வேளாண் சட்­டங்­கள் விவ­சா­யி­க­ளின் நலன் கரு­தியே அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அவற்றை திரும்­பப் பெறும் பேச்சுக்கே இட­மில்லை என்­றும் மத்­திய அரசு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

டெல்­லி­யில் நில­வும் கடுங்­கு­ளிர், கன­ம­ழைக்கு மத்­தி­யில் விவ­சா­யி­கள் சாலை­க­ளி­லேயே கூடா­ரம் அமைத்து, சமைத்து, அங்­கேயே உண­வ­ருந்தி, உறங்கி வரு­கின்­ற­னர். பல்­வேறு தரப்­பி­னரும் விவ­சா­யி­களுக்கு ஆத­ரவு தெரி­வித்­து வரும் நிலை­யில், விவ­சா­யி­களில் ஒரு பிரி­வி­னர் வேளாண் சட்­டங்­களை ஆத­ரிப்­ப­தாக மத்­திய அர­சு சுட்டிக்­காட்­டு­கிறது.

இந்­நி­லை­யில், விவ­சா­யி­களுக்கு ஆதரவாக நாடு தழு­விய போராட்­டத்­தை காங்­கி­ரஸ் அறி­வித்து உள்­ளது.

விவ­சா­யி­க­ளு­டன் நிற்­பது காங்­கிரசின் கடமை என்று அக்­கட்­சி­யின் செய்­தித் தொடர்­பாளர் ரந்­தீப் சுர்­ஜே­வாலா டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார். எதிர்­வ­ரும் 15ஆம் தேதியை 'விவ­சா­யி­கள் அதி­கார தின­'மாக காங்­கி­ரஸ் கடைப்­பி­டிக்­கிறது என்றார் அவர்.

அன்­றைய தினம் அனைத்து மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிரதேச தலை­ந­க­ரங்­களில் ஆளுநர் மாளி­கையை முற்­று­கை­யிட்­டுப் போராட்­டம் நடத்­தப்­படும் என்று குறிப்­பிட்ட ரந்தீப் சுர்ஜேவாலா, புதிய வேளாண் சட்­டங்­களை திரும்­பப்­பெ­ற­வும் வலி­யு­றுத்­தப்­படும் என்­றார்.

இதற்­கி­டையே விவ­சா­யி­கள் போராட்­டம் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் மேலும் ஒரு விவ­சாயி தன் உயிரை மாய்த்­துக் கொண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.