தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேலும் ஆறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு

1 mins read
8ba2d201-2dd1-4d9c-b020-d30cd1c58593
அலங்காநல்லூ ரில் நாளை நடக்கும் போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் வீரர்களைப் பந்தாடும் காளைகளுக் கும் பரிசுகள் தர உள்ளனர். படம்: ஊடகம் -

தமி­ழ­கத்­தில் பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு மாவட்­டங்­கள் தோறும் ஜல்­லிக்­கட்டு போட்டி நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

அேதபோல் இந்த ஆண்­டும் முதல்­கட்­ட­மாக மதுரை மாவட்­டத்­தில் அவ­னி­யா­பு­ரம், பால­மேடு, அலங்­கா­நல்­லூர் ஆகிய இடங்­களில் ஜல்­லிக்­கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மதுரையில் இன்­று­மு­தல் 16ஆம் தேதிவரை இப்போட்டிகளை நடத்த தமிழக அரசு அனு­ம­தித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இப்­போது மேலும் ஆறு மாவட்­டங்­களில் இன்று முதல் 31ஆம் தேதி வரை ஜல்­லிக்­கட்டு போட்­டி­களை நடத்துவதற்கு அனு­மதி கிடைத்துள்ளது.

திண்­டுக்­கல், கிருஷ்­ண­கிரி, தேனி, திருப்­பூர், சிவ­கங்கை, புதுக்­கோட்டை ஆகிய ஆறு மாவட்­டங்­க­ளி­லும் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டியுடன் வட­மாடு, மஞ்சு­வி­ரட்டு, எரு­து­விடும் விழா ஆகிய வீர விளை­யாட்­டுப் போட்­டி­களும் நடத்தப்பட உள்ளன.

இது­தொ­டர்­பாக கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை செய­லர் கே. கோபால் வெளி­யிட்டுள்ள அர­சாணையில், "ஜல்­லிக்­கட்டு, வட­மாடு, மஞ்சு விரட்டு, எரு­து­வி­டும் விழா ஆகிய வற்றை இன்று முதல் 31ஆம் தேதி வரை நடத்த ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­கித் அனு­மதி அளித்­துள்­ளார்.

"அதன்­படி, திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் பெரி­ய­கா­ளை­யம் புத்­தூர், உல­கம்­பட்டி, ஏ.வெள்­ளோடு உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் காவே­ரிப்­பட்­டி­னம், அல­சீ­பம், செம்­ப­ட­முத்­தூர், குப்­பச்­சிப்­பா­றை­யி­லும் தேனி மாவட்­டத்­தில் பல்­ல­வ­ரா­யன்­பட்­டி­யி­லும் திருப்­பூர் மாவட்­டத்­தில் அழ­கு­மலை பகுதி யிலும் புதுக்­கோட்­டை மாவட்டத்தில் விரா­லி­மலை அம்­மன்­கு­ளத்­தி­லும் சிவ­கங்கை மாவட்­டத்­தில் சிறா­வயல், கண்­டி­பட்டி, குன்­றக்­குடி உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் ஜல்­லிக்­கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன," எனக் கூறி­யுள்­ளார்.