பிரதமர் மோடி: இதயங்களில் வாழும் எம்ஜிஆர்

பிரதமர் மோடி: இதயங்களில் வாழும் எம்ஜிஆர்

1 mins read
034c0f44-4d93-4c65-b818-39ed27e25435
அதிமுக அலுவல கத்தில் சபதம் ஏற்ற முதல்வர், துணை முதல்வர். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: தமி­ழ­கத்­தின் ஆளும் கட்­சி­யான அதி­மு­க­வின் நிறு­வ­ன­ரும் மறைந்த முன்­னாள் முதல்­வரு­மான எம்­ஜி­ஆ­ரின் 104வது பிறந்­த­நாள் நேற்று தமி­ழக அரசு சார்பில் கொண்­டா­டப்­பட்­டது.

திரைப்­ப­டத்­து­றை­யி­லும் அர­சி­ய­லி­லும் இறு­தி­வரை வெற்­றி­மேல் வெற்றி பெற்று கொடி­கட்டிப் பறந்த எம்­ஜி­ஆ­ரின் பிறந்த நாளை­யொட்டி, பிர­த­மர் நரேந்­திர மோடி அவ­ருக்குத் தமிழில் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

"பாரத ரத்னா எம்­ஜி­ஆர் பல­ரது இத­யங்­களில் வாழ்ந்துகொண்­டி­ருக்­கி­றார். அவ­ருக்கு எனது புகழ் வணக்­கம்," என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

எம்­ஜி­ஆர் திரை­யு­ல­கி­லும் அர­சி­ய­லி­லும் பர­வ­லாக மதிக்­கப்­பட்­டார் என்று குறிப்­பிட்­டுள்ள பிர­த­மர் மோடி, அவர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது வறு­மையை ஒழிக்க வும் பெண்­க­ளுக்கு அதி­கா­ரம் அளிக்­க­வும் பல முயற்­சி­க­ளைத் தொடங்­கியதாகவும் கூறினார்.

எம்­ஜி­ஆ­ரின் பிறந்­த­நாளை அவ­ரின் சிலைக்கு மாலை அணி­வித்­தும் பொது மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்­கி­யும் அதி­மு­க­வி­னர் விமரிசை யாகக் கொண்­டா­டி­னர்.

'தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்' என்று அறைகூவல் விடுத்து முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக அலு வலகத்தில் சபதம் ஏற்றனர்.

கட்சி அலுவலகத்தில் அமைந்து உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர். மாநிலம் முழுவதும் கட்சியினரும் எம்ஜிஆர் ரசிகர்களும் தங்கள் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.